(Reading time: 8 - 16 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

சட்டென்று தலை எடுத்து என் முகத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினாள்.

" உனக்குக் கோவம் வருதில்லே?"

குறுக்கே தலையைத் திருப்பினாள். " இல்லெ. எந்த ஆம்பளெயாவது பொம்பளே மனசெப் புரிஞ்சிகிறானான்னு யோசிக்கிறேன்."

" போவட்டும். புரிஞ்சிக்கறதுக்கு முயற்சிகூட பண்ண மாட்டான். காரணம் தான் ஒரு ஆம்பளெ எங்கற்தனாலே."

" ஆமாம். புல்லெவிட, பஞ்செவிட லேசான பொம்பளெக்கி ஒரு மனசு, அதுலே ஏதோ இருக்கற்துகூடவா? அதெப் புரிஞ்சிக்கற்துத்துக்கு என்ன இருக்குது? அவ்வளவு

தான் இல்லே?"

" பைத்தியக்கார பானு! நீ எவ்வளவு தப்பா நினெக்கிறியோ அது உனக்குத் தெரியுமா! உன் சொந்த அனுபவங்களெ வெச்சி மொத்தத்துக்கும் முடிவு பண்றதுன்னா அதெ ஒத்துக்க முடியுமா?"

"தப்பா நினெக்கற்து நானில்லே. ஒரு விஷயத்தெ எடுத்துச் சொன்னா பொம்பளெயெ ஒத்துக்கற்து ரொம்ப குறைவு. ஆம்பளெக்கிச் சிறப்பு இருக்குது. சிறகெ விரிச்சு பறக்கச் சுதந்திரம் இருக்குது. அது இப்பவும் இருக்குது. எப்பவும் இருக்கும். இன்னும் சொல்லப் போனா எனக்குப் பொறாமேன்னுகூட நினெச்சிக்கலாம். அப்படின்னா நீயும் அவ்வளவுதாங்கிறியா?"

"ஏன்? நான் ஆம்பளெ இல்லை?"

"இருக்கலாம். ஆனா உன்கிட்டெ ஏதோ ஒரு தனித்தன்மெ இருக்குது. உன்னெ நம்பி இருக்கறவங்களுக்கு நீ எப்பவும் அநியாயம் பண்ணமாட்டே. உன்கிட்டெ அன்பு செலுத்தறவங்களெ நீ என்னெக்கும் வெறுக்க மாட்டே. உன்னெ விரும்பறவங்களெ நீ என்னெக்கும் நிராகரிக்கமாட்டெ."

"அது உன் கற்பனெ! காலம் யாரெ எப்படி மாத்திடுதோ யாருக்குத் தெரியும். நீ சொன்ன இந்தச் சொல்லுங்க நாளெக்கி என் மனெவி வாயிலே இருந்து வரணும். இந்த எண்ணங்க எல்லாம் அவளோட இதயத்திலே நிலெச்சி இருக்கணும். அப்பொ தான் உன் நினெப்புக்கு ஏத்தவன்னு ஒத்துக்கறேன்."

"தப்பாம அது நடக்கும். காலம் எல்லாரெயும் மாத்தற்தில்லெ தெரியுமா! காலத்தெ ஜெயிக்கற மனுஷங்ககூட கொஞ்சபேர் இருக்கறாங்க."

சாப்பாடு முடிந்தது. மேலுக்கு வீரமாகப் பேசிக்கொண்டிருந்தேனே தவிர மனமெல்லாம் கசப்பான வரலாறு கேட்டாற்போலக் குழப்பம் நிறைந்திருந்தது. அப் போதுதான் தூக்கத்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.