படுக்கை அருகில் குனிந்து கணவனைப் பார்த்தாள். அவனுடைய நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்பியிருந்தது. கண்கள் லேசாகத் திறந்திருந்தன. அருகில் கிடந்த துண்டினால் அவன் நெற்றியை லேசாகத் துடைத்து விட்டு, "என்ன, காபி கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுகிறீர்களா!" என்று கேட்டாள் பவானி.
அவன் பதில் பேசவில்லை. மெதுவாக அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. அப்பொழுதும் அவன் அசையவில்லை. மிகவும் நிதானமாக அவன் 'வளங் கையைத் தொட்டுப் பார்த்தாள். 'சில்'லென்று இருந்த அந்தக் கரம் அவளை நடுக்கத்துடன் பின் வாங்கச் செய்தது. அவள் பிடியினின்று துவண்டு அது படுக்கையில் விழுவதற்கும், அவள் சற்றும் எதிர்பாராத விதமாக டாக்டர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.
”எப்படி இருக்கிறார்?" என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் சென்று அவன் கையை எடுத்தவுடன் வேதனையால் அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டார் .
”டாக்டர் அவர்?..." என்று பவானி திணறிக் கேட்பதற்கு முன்பு ”அவ்வளவு தான் அம்மா, நீ கொடுத்து வைத்தது. கடவுளின் கருணை உன் விஷயத்தில் வற்றிவிட்டது" என்று கூறினார்.
--------------
தொடரும்