கல்யாணராமன் வந்த போது. கூடத்தில் நின்றிருந்த கோமதியைக் காணோம். அவள் வண்டியில் போய் ஏறிக் கொண்டு விட்டாள். நாகராஜன் மட்டும் அவர் அருகில் நின்றிருந்தான்.
“ஊருக்குப்போய்விட்டு வருகிறேன் மாமா. பவானியைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவசியமானால் அவளைப் பற்றி எனக்கு ஏதாவது செய்தி இருந்தால் தெரிவிக்க அஞ்சாதீர்கள்" என்று அவரிடம் கூறி விடை பெற்றுக் கொண்டான்.
தமையனும் மன்னியும் ஏறிச் செல்லும் வண்டி தெருக் கோடியைத் தாண்டிப் போகும் வரையில் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் பவானி. அவள் அருகில் வந்து நின்ற பார்வதியைச் சிறிது நேரம் பவானி கவனிக்கவில்லை .
"பவானி! என்ன அப்படி ஒரேயடியாக எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அன்புடன் கேட்டு அவள் சிந்தனையைக் கலைத்தாள் பார்வதி.
--------------
தொடரும்