Page 3 of 3
"ஏண்டா கண்ணா ! உனக்குப் பசிக்கவில்லையா மணி இரண்டாகப் போகிறதே! சாப்பிட வாயேன்" என்று அழைத்தாள் பவானி.
"நீயும்தான் சாப்பிடவில்லை அம்மா, உனக்குப் பசிக்காதா? வா, நானும் நீயும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று சொல்லியபடி பாலு எழுந்து சமையலறைக்குள் புகுந்து இரண்டு தட்டுக்களை எடுத்து வைத்துத் தானே உணவு பரிமாற ஆரம்பித்தான்.
சற்று முன் கண்ணீரால் நனைந்து போயிருந்த பவானியின் கண்கள் இவ்வதிசயத்தைப் பார்த்து மகிழ்ந்தன. "நீ கொஞ்சம் உருளைக்கிழங்கு அதிகமாகவே போட்டுக் கொள்ளடா பாலு!" என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்லிக் கொண்டே பவானி தட்டின் முன்னால் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
--------------
தொடரும்