தன்னுடைய தாய் திடீரென்று கலகல வென்று பேசிக் கொண்டிருப்பது பாலுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
”கதை கேட்டு அலுத்து விட்டது மாமா. வேறே ஏதாவது விளையாட்டுச் சொல்லிக் கொடுங்கள்" என்று .
அவன் கல்யாணராமனைப் பார்த்துக் கேட்டவுடன், மூர்த்தி அவனைப் பார்த்து “உனக்கு என்ன விளையாட்டு தெரியும் சொல். நானும் நீயும் விளையாடலாம்" என்று கேட்டான்.
பாலுவுக்கு உற்சாகம் பொங்கி வந்தது.
"ஒரு வாரமாக சேஷாத்திரி வீட்டில் கேரம் ஆடிப் பழகி இருக்கிறேன். அந்த ஆட்டம் நன்றாக இருக்கிறது. விளையாடலாமா?" என்றான்.
பார்வதியும் அடுப்பங்கரை வேலைகளை முடித்துக் கொண்டு தெருத் திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாலு சொல்லியதைக் கேட்டவுடன் அவள், "ஆமாம் மூர்த்தி! ’கேரம்' பலகை மச்சில் தூசு படிந்து கொண்டு கிடக்கிறது. நாளைக்கு அதை எடுத்து பாலுவுக்குக் கொடு" என்று கூறினாள்.
பாலுவுக்கு அப்பொழுதே அந்தப் பலகையை எடுத்து வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அவனுக்குச் சரியான தூக்கமே இல்லை.
--------------
தொடரும்