(Reading time: 8 - 16 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

மூர்த்தி கபடமாகச் சிரித்துக் கொண்டே பவானியை இவ்விதம் கேட்டான்.

  

பவானி துணிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண் டாள். அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்து 'நீங்கள் சென்னைக்குப் போகிறீர்களா?" என்று கேட்டாள்.

  

அந்தப் பெண் பதில் கூறுவதற்கு முன்பு ரயில்கிளம்பி விட்டது. ஜன்னல் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு மூர்த்தி வாடிய முகத்துடன் நடந்து வந்தான். ஜேபியிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டினான். தன்னையே வெறித்துப் பார்க்கும் அவனைப் பார்க்க விரும்பாத பவானி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

  

பசுமலையின் கோவில் கோபுரம் தெரிந்தது. அது வும் மறைந்து கொண்டே வந்தது. பவானிக்கு மனத்தில் ஏற்பட்டிருந்த வெறுப்பு அடங்கி வண்டிக்குள் இருந்தவர்களைக் கவனிக்கச் சிறிது நேரம் பிடித்தது.

   

--------------

முதல் பாகம் முற்றிற்று

Go to Muthu sippi story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.