(Reading time: 8 - 15 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

  

அவள் மறுபடியும் கண் திறந்து நிமிர்ந்து பார்த்த போது, தெரு விளக்கின் மங்கிய ஒளியில் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டாள். கல்யாணம் கீழே இறங்கிக் கார் எந்த அளவுக்குச் சேதம் அடைந்திருக்கிறது என்று பார்த்துத் திருப்தியுடன் தலையசைத்து விட்டு அதன் 'பானெட்' டின் மேல்குனிந்து அதனை முத்தமிட்டான்.

  

பிறகு திரும்பி வந்து மீண்டும் பவானிக்குப் பக்கத்தில் அமர்ந்தான். "ஒண்டர்ஃபுல், ஒண்டர்ஃபுல்! நாடகத்தில் நான்தான் கதா நாயகன்! வேறு யார் போட்டிக்கு வந்தாலும் விடப் போவதில்லை" என்றான்.

  

"காருக்கு ரொம்ப சேதமோ?" என்று கவலையுடன் கேட்டாள் பவானி.

  

இடது பக்க மட்கார்டில் பலத்த சேதம். சொட்டை விழுந்திருக்கிறது. பெரிதாக. ஆனால் நான் அதை ரிப்பேர் செய்யவே போவதில்லை. திஸ் இஸ் மை லக்கி டே!

  

அதன் நினைவாக அந்தப் 'பெண்' டை அப்படியே வைத்திருக்கப் போகிறேன்.

  

பவானி குபீரென்று அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

  

வான வில்லின் வண்ணங்களையும் மல்லிகை மணத்தையும் பட்டின் மென்மையையும் ஜல தரங்க நாதத்தையும் ஒருங்கே ஒரே சமயத் தில் உணர்ந்தான் கல்யாணம்.

தொடரும்...

Go to Arumbu ambugal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.