Page 4 of 4
பவானி முதலில் சிறிது தயங்கினாள். அப்புறம் ஜெயஸ்ரீயைப் பார்க்க வந்தேன்" என்றாள்.
”நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் அம்மா?" என்று சுவாமிநாதன் விசாரிக்கவும் பவானி, விவரங்களைக் கூறினாள்.
சுவாமிநாதன் சிரித்தார். "குழந்தைகள் அப்படித் தான் ஒன்றோடொன்று சண்டை பிடித்துக் கொள்ளும். விரோதத்தை மனசிலே வைத்துக் கொள்ள மட்டும் அவர்களுக்குத் தெரியாது" என்று கூறி விட்டு, 'நாகராஜனுக்கு ஒரு தங்கை இருப்பதாகவே எனக்குத் தெரியாது..." என்று சொல்லிப் பேச்சை முடிக்காமல் நிறுத்தினார் அவர்.
அந்த இளம் பெண் ஒரு விதவை என்பதை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய உள்ளம் வாடி வருந்தியது.
--------------
தொடரும்...