Page 4 of 4
'மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே' என்று வேண்டி அவன் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமே இல்லை.
மூர்த்தியின் மனம் சடுதியில் இப்படிப் பல விதங்களாக மாறும் இயல்பை அடைந்து விட்டது. பிறகு தான் அவன் தன் நண்பனுடன் நாடகம் பார்க்க வந்தான். வந்த இடத்தில் ராதாவிடம் தன் சந்தோஷத்தையும் அறிவித்தான். அதற்குப் பதிலாகக் கிடைத்த அவள் புன்சிரிப்பை அவன் விலை மதிக்க முடியாத *கோஹினூர்' வைரத்துக்கு ஒப்பிட்டான். அதைப் பற்றியே அவன் சிந்தித்துக் கொண்டு சென்னையை வலம் வந்து கொண்டிருந்தான்.
--------------
தொடரும்...