அவன் அறையை விட்டுச் சென்றதும், மூர்த்தி எழுந்திருந்து கீழே சென்று ஹாஸ்டலில் சிற்றுண்டியும். காப்பியும் சாப்பிட்டு விட்டு வந்தான். பிறகு . சோப்புத் தேய்த்து முகம் கழுவி, வாசனை வீசும் பவுடர் பூசிக் கொண்டான், தலைக்கு வாசனைத் தைலம் தடவி தலைவாரிக் கொண்டு, உடை அணிந்து கொண்டான். பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு அவன் புறப்படும்போது மணி சரியாக ஏழு அடித்து விட்டது. கோடம்பாக்கம் ரோட்டில் அவன் பார்த்திருந்த அறைக்குச் சென்று சாமான்களை வைத்து விட்டு இரவுச் சாப்பாட்டுக்காக மாம்பலம் பாண்டிபஜாரை நோக்கிப் போனான் மூர்த்தி.
கல கலவென்று இரவு ஒன்பது மணி வரையிலும் கூடச் சந்தடியாக இருக்கும் அந்தக் கடைத் தெருவில் இருந்த ஒரு வளையல் கடையின் முன்பாக ஒரு ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து ராதா இறங்கினாள். கை யிலிருந்த வெல்வெட் பையைச் சுழற்றிக் கொண்டே அவள் கடைக்குள் நுழைவதை பார்த்தி கவனித்தான். நடைபாதையில் பின்கள், பித்தான்கள் 'கிளிப்'புகள் விற்கும் ஒரு கடை அருகில் நின்று ஏதோ வியாபாரம் செய்பவனைப் போல் வளையல் கடையைக் கவனித்துக் கொண்டு நின்றான் மூர்த்தி. ராதா உதட்டுச் சாய புட்டி ஒன்று வாங்கினாள். ஜிலு ஜிலு வென்ற சுடர் விடும் போலிக் கற்களால் செய்த மாலை ஒன்றை எடுத்துப் பார்த்தாள்.
நட்சத்திரங்கள் போல் செய்த மாலையின் நடுவில் சிவப்பு ஒற்றைக் கல் வைத்து பதக்கம் காணப்பட்டது. மாலையைத் தன் கழுத்தில் பதி வைத்துப் பார்த்துக் கொண்டாள் ராதா. எதிரே கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. சங்கு போன்ற வெண்ணிறமான அவள் கழுத்துக்கு அது எடுப்பாகவே இருந்தது. மற்றும் சில கண்ணாடி வளையல்களும் ரிப்பன்களும் வாங்கிக் கொண்டு, பில் பதினைந்து ரூபாயையும் மேஜை மீது வைத்து விட்டு ரசீது பெற்றுக் கொண்டாள் ராதா.
அவள் கடையைவிட்டு இறங்கி வரும் போது மூர்த்தி அருகில் இருந்த சோடா கடைப் பக்கம் சென்று நின்றான். கலர் ஒன்று வாங்கிச் சாப்பிட்டவாறு தன் முதுகுப் புறத்தை அவள் பக்கமாகத் திருப்பிக்கொண்டு நின்றான். அவள் மறுபடியும் ரிக்ஷாவில் ஏறி 'பனகல் பார்க்' வழியாகச் செல்லுவதைக் கவனித்தான்.
அன்று அதற்கு மேல் அவன் அவளைத் தொடர்ந்து செல்ல விரும்பாமல். அருகில் இருந்த