Page 5 of 5
அவர் கூறியதைக் கேட்ட ராதா கல கலவென்று சிரித்தாள். கழுத்தில் ஏற்கெனவே அணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றிவிட்டு, புதிதாக வாங்கி வந்த மாலையை அணிந்து கொண்டு அவர் எதிரில் வந்து நின்றாள் அவள்.
வசந்த காலத்துப் பௌர்ணமி இரவில் மலர்ந்த மல்லிகையைப் போல் அவள் அழகு பிரதிபலித்தது. ’இப்படி அழகும், அறியாமையும், வெகுளித்தனமும் நிறைந்த இந்தப் பெண்ணுக்குத் தகுந்த கணவன் வாய்க்க வேண்டுமோ' என்று சுவாமிநாதன் கவலைப்பட்டார்.
அவரையறியாமல் அவர் கண்களில் நீர் சுரந்தது.
--------------
தொடரும்...