(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

வளராதாம். எங்கே யாவது எதற்காவது போயிருப்பாள். அவளை இப்படியே விடக் கூடாதம்மா. சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணத்தை பண்ணி ஆக வேண்டும்" என்றார் சுவாமிநாதன்.

  

"அதுவும் சாமானியமாக நடந்து விடுகிற காரியமா சுவாமி? ராதாவுக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்து நீங்களும், நானும் கல்யாணம் பண்ணி வைத்துவிட முடியுமா? அவளே தேர்ந்தெடுத்துச் சொல்லப் போகிற வனைத்தான் நாம் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும்படி இருக்கும்" என்றார் ஸ்ரீதரன்.

  

அவ்வளவு தூரம் அந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? நீங்கள் இதுவரைக்கும் கொடுத்திருக்கிற செல்லம் போதும். அந்த அளவுக்கு வேறு இடம் கொடுத்து விடாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார் சுவாமிநாதன்.

  

பவானி வீடு திரும்பும் போது ராதாவைப் பற்றிப் பலவிதமாக எண்ணமிட்டாள். பாவம், அந்தப் பெண்ணைச் சரியான முறையில் வளர்க்கத் தாயும் தந்தையும் இல்லை. உடன் பிறந்தவர் தம் தொழில் ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். அத்துடன் குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு அனுபவம் அடையாதவர். நல்ல இடத்தில் ராதா வாழ்க்கைப்பட்டுச் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

  

--------------

தொடரும்...

Go to Muthu sippi - Part 2 story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.