(Reading time: 5 - 10 minutes)
Muthu Sippi
Muthu Sippi

"அவர் செய்து வைத்தாலும், தங்கை சம்மதிக்க பாட்டாளே. அவள் என்னவோ இப்பொழுதே அறுபது வயசு பாட்டி மாதிரி பூஜையும், பக்தியும் பிரமாதப் படுத்துகிறாள். எனக்கு அதெல்லாம் கட்டோடு பிடிப்பதில்லை .. "

  

"பிடிக்காவிட்டால் போகிறது."

  

உனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே.... இனிமேல் தானே ஆகப்போகிறது. பிறகு தான் பக்தி, அது இது என்று ஏற்படும்."

  

ராதா. வாசல் திரையைத் தள்ளிக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள். நாகராஜன் அங்குமில்லை.

  

"வாருங்கள் போகலாம்..." என்று கூறியதும் மூர்த்தியும், அவளும் வெளியே வந்தார்கள். மழை பெய்து தரையில் ஒரு ஓரமாக ஜலம் தேங்கிக் கொண் டிருந்தது . தவறிப் போய் ராதா தண்ணீரில் காலை வைத்துவிட்டாள். 'ஐயையோ!" என்று சொல்லிக் கொண்டே அவள் தண்ணீரைத் தாண்டப் போக மூர்த்தி அவள் கீழே விழுந்து விடப் போகிறாளே என்று கைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டான்.

  

வெகு சமீபத்தில், வக்கீல் வேதாந்தத்தின் கார் நின்று கொண்டிருந்தது. பழக்கமான குரல் அருகில் கேட்கவே. டாக்டர் காமாட்சி வெளியே எட்டிப் பார்த்தாள். ராதாவை அவளுக்குத் தெரியும். 'என்ன அப்பா இது? டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை தானே, அந்தப் பெண்? கூட இருக்கிற பையன் யார் என்று தெரியவில்லையே? உம்... ”

  

வேதாந்தம் வெளியே பார்த்தார். மூர்த்தியும் ராதாவும் தொலைவில் சென்று விட்டார்கள்.

  

"அவள் தான் அம்மா! அந்தப் பையன் யார் என்று தெரியவில்லையே! அறியாத பெண் இப்படி இந்த ஊரில் தெருவில் ... டாக்டர் ஸ்ரீதரனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. வயசு வந்த பெண்ணை எதற்கு வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? பணமா இல்லை? காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ணி விடுவது தானே... அவன் யாராக இருக்கும்?..." என்று திருப்பித் திருப்பிக் கேட்டார் வேதாந்தம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.