கை விலங்கிடப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை அவள் மனம் கண்டது. உயர் நீதி மன்றத்தில் தன் கணவன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு இருப்பதையும் கற்பனை செய்து பார்த்தாள்.
பெண்ணின் மனத்தை மிருதுவான மலருக்கு உவமையாகக் கூறுவார்கள். ஆனால் தாங்க முடியாத துயரம், நடக்க முடியாத சம்பவம். கேட்கத் தகாத சொற்கள் இவற்றை அவள் தாங்கியும் கேட்டும் பார்த்தும் அனு பவிக்கும்போது உறுதிவாய்ந்த கற்பாறையாக அவள் மனம் மாறிவிடுகிறது.
ராதா கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே அப்படியே உட்கார்ந்து விட்டாள். கீழே ஸ்ரீதரன் தம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடிக்கு வந்தார். நேராக ராதாவின் அறைக்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்,
கையில் கடிதத்துடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததும் அருகில் சென்று ”என்ன அம்மா அது? யார் எழுதி இருக்கிறார்கள்? உன் புருஷன் சௌக்கியம் தானே?" என்று விசாரித்தார். அந்த விநாடியில் ராதாவின் உள்ளத்தில் பல யோசனைகள் தோன்றின. 'இது நாள் வரையில் தன் கணவனைப் பற்றி அவரிடம் கூறாமலே இருந்து விட்டு, திடீரென்று இந்தச் செய்தியைப் பற்றிச் சொன்னால் அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்க மாட்டார்?' என்று ராதாவுக்குத் தோன்றியது. கையில் இருக்கும் கடிதமோ, நடக்கக் கூடாத விஷயத்தைத் தாங்கி இருக்கும் கடிதம். அதைப் பிறர் படிப்பதற்காகக் கொடுப்பதும் நல்லதல்ல. ஆத்திரப்பட்டுத் தான் தேடிக் கொண்ட வினையின் விளைவைத் தானே அனு பவிக்க உறுதி கொண்டாள் அந்தப் பேதை.
தன் மனப் பாரத்தை மறைத்துக் கொண்டு சட்டென்று அவர் பக்கம் திரும்பி, 'அவர்தான் எழுதி யிருக்கிறார் அண்ணா . இத்தனை நாட்கள் அவர் ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்தாராம். அங்கே 'காம்ப்' சென்றிருந்தவருக்கு மலைக்காய்ச்சல் வந்து விட்டதாம் இப்பொழுது குணமாகி இருப்பதாக எழுதி இருக்கிறார்" என்றாள்.
”இது என்ன அம்மா வேலை? சாப்பாடு வேளைக்கில்லாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு தேக ஆரோக்கியத்தையும் குறைத்துக் கொள்வது ஒன்று தான் லாபம் . பேசாமல் வேலையை