(Reading time: 8 - 16 minutes)
Muthu Sippi
Muthu Sippi

ராஜிநாமா செய்து விட்டு இங்கே வந்து விடச் சொல். நான் நல்ல வேலையாகப் பார்த்துக் கொடுக்கிறேன்."

  

ராதா சரியென்று தலை யசைத்தாள். மறுபடியும் அவள் அண்ணாவின் முன்பு அவள் கணவன் ஒரு கௌரவ மனிதனாக வருவானா என்பது அவளுக்கே தெரியாது.

  

ஸ்ரீதரன் அங்கிருந்து சென்றதும் ராதா அக்கடிதத்தை மறுபடியும் படித்தாள். எவ்வளவோ கெளரவமும், கண்ணியமும் வாய்ந்த மனிதருக்கு அவள் சகோதரியாக இருந்தாலும், அவருடைய பெருங் குணங்கள் இவளை அடையவில்லை. சிப்பியின் வயிற்றில் முத்துக் கள் விளைகின்றன. பளபள வென்று மின்னும் கருநாக மும் தன்னுள நஞ்சை வைத்துக் கொண்டிருக்கிறது. வெறும் சிப்பியாயிற்றே, இதனுள் என்ன பிரமாதமாக இருக்கப் போகிறது என்று அதை நாம் உதாசீனம் செய்ய முடியாது. மென்மையும், பளபளப்பும் கொண்ட கருநாகத்தின் அழகை மெச்சி அதை அணைத்துக் கொள்ளவும் முடியாது . நற்குணங்கள் ஒவ்வொரு வருக்கும் பிறவியிலேயே அமையவேண்டும்.

  

ராதா ஆரம்பத்திலிருந்தே தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறாதவள். மூர்த்தியைப் பற்றியும் தன் தமையனிடம் கூறவில்லை. தன் விரும்பம் போல் செய்து கொண்ட மணம் ஆயிற்றே; கணவரிடம் இருக்கும் குறைபாடுகளை அம்பலப்படுத்தினால் இகழ்ச்சியில் வந்து முடிந்துவிடுமே என்கிற பலவீனம் தான் இதற்குக் காரணமாக அமைந்தது. இந்தப் பலவீனம் நாளடைவில் வளர்ந்து, எதையும் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ஆற்றலை அவளுக்கு அளித்தது.

  

கடிதத்தை எடுத்துப் பத்திரமாகப் பீரோவில் வைத்துப் பூட்டிய ராதா, அங்கே உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் தோட்டத்துக்குள் சென்றாள்.

   

--------------

தொடரும்...

Go to Muthu sippi - Part 2 story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.