கூட நகராமல், சிறிது துக்கத்தோடு சொன்னார்.
“சார். இந்தப் பையனப் பத்தி சொல்றதைப் பார்த் தால் இவன் பார்க்குற பார்வையைக் கணக்கெடுத்தால் அநேகமாக ஹெர்மா புராடக்டா, இருக்கலாமோன்னு எனக்கு ஒரு சந்தேகம்.”
“ஒன் சந்தேகத்தைத் தூக்கிக் குப்பையில போடுய்யா. நாட்டுல யார் யார் எதைப்பத்தி பேசணும்னே விவஸ்தை இல்லாமப் போச்சு. எம்.எல்.ஏ.யைக் கூட்டிட்டு வான்னா கூட்டிட்டு வாயேன். சரி பிரதர்ஸ். சரியாயிடும்... ஒகே.”
வெளியே வந்தவர்கள், எதிரில் உள்ள மருந்துக் கடைக்குப் போனார்கள். கடைக்காரர் பிரிஸ்கிரிப்ஷனைப் பார்த்துவிட்டு, “இந்த மாத்திரை மார்க்கெட்ல இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாலேயே அவுட்டாயிட்டே. ஆல்டர்னேடிவ் மாத்திரை எழுதித் தரச் சொல்லுங்க. இவனுவலெல்லாம் டாக்டர்” என்றார். உடனே மூர்த்தி மீண்டும் டாக்டரிடம் போனான். அரை மணி நேரம் கழித்து மருந்துக் கடையில் தாளை நீட்டினான். ஏழு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. அங்கேயே, ஒரு டம்ளரில் தண்ணிர் வாங்கி, சுயம்புவின் வாயில் ஒரு மாத்திரையைப் போட்டு, விதைக்குத் தண்ணிர் ஊற்றுவது போல் ஊற்றினான்.
-----------------
தொடரும்...