(Reading time: 6 - 12 minutes)
Vata malli
Vata malli

டேய் முத்து. இவன் வாய்க்குள்ள மாத்திரையைத் திணிடா. அப்பத்தான் தத்துப்புத்துன்னு பேசமாட்டான்.”

  

சுயம்புவின் வாய்க்குள் இரண்டு மாத்திரைகள் உருட்டி விடப்பட்டன. ஒரு டம்ளர் தண்ணிர் நாக்கு வழியாக உருண்டோடியது. அவனைக் கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு மூர்த்தி முத்துவோடு படுத்துக்கொண்டான்.

  

எல்லோரும் தூங்கிவிட்டார்கள். ஒரு மங்கலான விளக்கு மட்டும் பாதித் தூக்கத்தில் எரிந்தது. நாய்களின் குலைப்புச் சத்தம்கூட இல்லை. சுயம்பு கூட படுத்த வேகத்திலேயே தூங்கிவிட்டான். அனைத்தும் அடங்கி, அனைத்து மூச்சுக்களும் கூட மூர்ச்சையானது போன்ற நடுநிசி.

  

சுயம்பு, வீறிட்டுக் கத்தினான். அந்தக் கத்தலில், அவன் அறைவாசிகள் மட்டுமல்ல, அந்த மாடி முழுவதிலுமிருந்தவர்கள் அவனை மொய்த்து விட்டார்கள். சில பயல்கள் ஜட்டிகளோடுகூட வந்தார்கள். சுயம்புவைப் பார்த்தார்கள். அவன் கைகால்கள் இழுத்தன. நாக்கு, வாய்க்கு வெளியேயும், உள்ளேயுமாய்ப் புரண்டு கொண்டிருந்தது. மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றை ஒன்று நெருக்கின. பற்களுக்கு இடையே அவன் நாக்கு வெட்டி எடுக்கப் போவது போன்ற நெருக்கம். கண்கள் சொருகின. தலை உருண்டது. அவனால் இப்போது கூச்சலிட முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு சப்தம். பூனையின் கால் நகங்களில் சிக்கிய அணில் மாதிரியான அவலச் சத்தம்.

  

மூர்த்தியும், முத்துவும், சுயம்புவின் தலையையும் கால்களையும் பிடித்துத் தூக்க, மற்றவர்கள் அவன் முதுகுக்குள்ளும், பின்பக்கமும் கைகளைச் சொருகினார்கள். சுயம்பு கூச்சப்பட்டு நெளிவது போலிருந்தது. பிறகு அந்த நெளிவே, நிமிர முடியாமல் திண்டாடியது. கால் கைகள் அங்கு மிங்குமாய் வெட்டி வெட்டி அவனைச் சுமந்தவர்களின் முகங்களில் ரத்தச் சுவடுகளை ஏற்படுத்தின.

  

சுயம்பு கீழே கொண்டு வரப்பட்டான். அநேகமாய் பிழைக்கமாட்டான் என்ற அச்சம். எங்கே போவது? டவுனில் எந்த டாக்டரும் இருக்கமாட்டார். டாக்டர் வீட்டைக் கண்டுபிடிக்கும் முன்பே உயிர் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விடலாம். மூர்த்திதான் தட்டுத் தடுமாறிச்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.