“ஒரு லெட்டராவது, ஒரே ஒரு தடவை...”
“லட்டர் வேண்டாம் மகளே! அது அவுங்கள கெஞ்சுறது மாதிரி இருக்கும். நான் எங்க வீட்டுக்கு செய்ததை ஒனக்கும் செய்யப்போறேன். உங்க அக்கா, பேருக்கோ அப்பா பேருக்கோ இருபத்தஞ்சு ரூபாய் அனுப்பி வைக்கேன். நம்ம அட்ரஸையும் கொடுக்கேன். நீயும் கீழ நாலு வரி எழுது, அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... என்ன. குருவக்காவா? இதோ வந்துட்டேன்.”
பச்சையம்மா குடிசைக்கு வெளியே வந்தாள். குருவக்கா அவளை ஒரு பக்கமாய் கூட்டிப் போனாள். அவள் சொன்னதைக் கேட்டு பச்சையம்மா பதறினாள்.
“முடியாதுக்கா... முடியவே முடியாது. என் மகள யாருக்கும் கொடுக்க முடியாது. ஊசி முனையில ஒத்தக் காலுல தவம் இருந்து எடுத்தது மாதிரியான மகள். நெருப்ப வளர்த்து அதுல திரெளபதியா வந்தது மாதிரியான மகள். இதுல பேசுறதுக்கு எதுவுமே இல்ல...”
-----------------
தொடரும்...