ஆட்டோ ரிக்ஷாவும் அவனும் பாதிப்பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள். அம்மாக்காரி, ஆத்திரம் தாங்காமல் கத்தினாள் :
"ஏண்டா அவள்கிட்ட அடிபடறதுக்கா உன்னை வளர்த்தேன்? உங்க தாத்தா எப்பேர்ப்பட்டவர்ன்னு உனக்குத் தெரியுமா...? புலிக்குப் பிறந்து பூனையா போயிட்டியேடா... ஏறுடா, ரிக்ஷாவில ஏறு. இவங்களோட போய், அவள் கையில விலங்கு போட்டு நம்ம வீட்டுப் பக்கமா இழுத்துக்கிட்டு வா. எவ்வளவு செலவானாலும் சரி.”
கடைசி வார்த்தையில் ருசிகண்ட கான்ஸ்டபிள்கள், அவனை ஏறச்சொல்லி, முகத்தை ஏற்ற இறக்கமாக ஆட்டினார்கள். அம்மாக்காரி இறங்கிக்கொண்டாள். இளங்கோ ஏறிக்கொண்டான். ஆட்டோ பறந்தது.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...