(Reading time: 13 - 25 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

   

ரமணன், இளங்கோவிற்கு காலையிலிருந்து அந்த இரவு வரை ஏற்பட்ட சோதனைகளை விளக்கினார். அந்த ஏரியாவில் ஒரு குழந்தை காணாமல் போனதையும், பல பொருட்கள் திருட்டுப் போனதையும், இவைபற்றி அவ்வப்போது காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தாலும், அவை போன இடம் தெரியவில்லை என்பதையும் விளக்கினார். இப்போது ஒரு கான்ஸ்டபிள் கையும் லத்தியுமாய் நிற்பதையும் சொன்னார். பிறகு , “ஹலோ... தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

   

"இன்னும் பத்து நிமிஷத்துல திருப்பி டெலிபோன் செய்யறதா சொல்லியிருக்கார்.”

   

"அப்படின்னா, உங்க டெலிபோன் நம்பரை அவர் கேட்டுருக்கணுமே டாடி! நீங்கதான பேசிக்கிட்டுப் போனீங்க, நீங்க பேசி முடிச்சதும் மூணு செகண்ட்ல அவரு டெலிபோனை வைச்சுட்டாரே"

   

"போலீஸ் ஆபீசருங்க எப்பவுமே அப்படித்தான். கட் அன்ட் ரைட்டாத்தான் இருப்பாங்க."

   

இதற்குள் போலீஸ்காரர், அந்த வீட்டையும் அவர்களையும் ஆழம் போட்டார். ஒன்பது நிமிடம் ஐம்பது வினாடி வரை பொறுமையோடு இருந்தார். பத்தாவது நிமிடம் படபடப்பானார்.

   

“சார், எனக்கு டைம் ஆகுது. குற்றவாளிய என்னோட அனுப்பி வைச்சீங்கன்னா, உங்களுக்கும் நல்லது."

   

"வேணும்னா விலங்கு போட்டு இழுத்துக்கிட்டுப் போய்யா. நீ இவர ஸ்டேஷன் வரைக்கும்தான் இழுக்க முடியும். நான் உன்ன சிட்டி முழுக்க இழுப்பேன். என்ன நினைச்சுக்கிட்ட?"

   

ரமணன் போட்ட சத்தத்தில் நியாயம் இருப்பது போல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு போலீஸ்காரர், பேசாமல் நின்றார். இதற்குள் டெலிபோன் மணி ஒலித்தது. ரமணனும், பாமாவும் போட்டி போட்டு ஓடினார்கள்.

   

பாமா எடுத்த டெலிபோனை ரமணன் வாங்கிக் கொண்டு "எப்படி என் டெலிபோன் நம்பரை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.