Page 11 of 11
விசாலாட்சி கேட்டதும், "இல்லை மாமி!" என்று பதில் அளித்தான் சங்கரன்.
"வயசாகிறது போல் இருக்கே. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறதென்றால்தான் படாத பாடும் பட வேண்டி இருக்கிறது, இந்தக் காலத்தில்!" என்று அலுத்துக் கொண்டாள் அவள்.
அவளுக்கு ஏற்பட்டிருந்த சலிப்பின் காரணத்தை ஒருவாறு புரிந்து கொண்டான் சங்கரன். சற்று முன்பு சிற்றுண்டி அளித்த காமுவுக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை என்பதும் தெரிந்தது தள தளவென்று வாழைக் குருத்து போல் மூக்கும் விழியுமாக இருக்கும் அவளுக்கு என்ன குறை என்பதுதான் சங்கரனுக்குப் புரியவில்லை.
-----------------------------