சம்பகம் துயரத்துடன் சுவாமி அலமாரிக்கு அருகிலேயே படுத்திருந்தாள். புடவை வேண்டுமென்று அவள் யாரிட மாவது சொன்ன ாளா, என்ன? நேரம் போவது தெரியாமல் அவள் தீவிரமாக யோசித்தாள். பெண்ணின் வாழ்வு சமூகத் தில் இன்றும் அவலமாகத்தான் இருக்கிறது. சகலமும் பொருந்தி இருந்தால் தான் அவள் மதிப்புடன் இருக்க முடியும். சம்பகமும் மதிப்புடன் வாழவேண்டும். சந்தேகம் தோன்ற ஆரம்பித்த பின்பு மதிப்பும், மரியாதையும் எதிர் பார்க்க முடியுமா? சாதாரணமாக ஏதோ பேசிக் கொண்டி ருந்ததற்கே அன்று நீலா ஏதேதோ பேசினாள் இன்று ஆசை யுடனும், அனுதாபத்துடனும் சங்கரன் யாரும் கூறாம் லேயே புடவை வாங்கி வந்திருக்கிறான். நீலா இதற்குப் பேசாமல் இருந்து விடுவாளா? ஏற்கெனவே, அவள் பிறந்த வீட்டில் பெண்ணைச் சரியாகக் கவனிக்கவில்லை. சங்கரன் மனைவியிடம் பிரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று புகார் செய்கிறார்களாம். "கடவுளே! இவ்வளவு பெரிய உலகத்தைச் சிருஷ்டித்து அதில் எனக்குப் புகலிடம் இல்லா மல் செய்து விட்டாயே! என்னை அன்புடன் 'வா!' என்று அழைப்பவர்கள் இல்லாமல் செய்து விட்டாயே!” என்று சம்பகம் மனம் வெடிக்கப் புலம்பினாள்.
கண்களில் அருவி போல் கண்ணீர் பெருகியது. தாயின் அன்பணைப்பில் சுகமாகத் தூங்கும் பானுவின் மெல்லிய மூச்சு வேதனை தரும் அவள் நெஞ்சில் பரவியது. இவ்வளவு துக்கத்துக்கும் நடுவில் கடவுள் ஒரு குழந்தையைக்கொடுத்து இருக்கிறார். அதை தன்னுடையது என்று உரிமை பாராட்டிக் கொள்ளலாம். பால் வடியும் அதன் முகத்தைப் பார்த்து மனச் சாந்தி பெறலாம். அதன் பேச்சில் ஈடுபட்டுக் கவலைகளை மறக்கலாம். கள்ளங் கபடமற்ற அதன் வார்த்தைகளைக் கேட்டுச் சந்தோஷிக்கலாம். குழந்தை மனம் குழந்தை உள்ளம் என்று சொல்லுகிறார்களே, அந்தக் குழந்தை மனத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி பலருக்கு இருப்பதில்லை.
நீலாவும் கலாசாலைப் படிப்பு படித்தவள்தான் நான்கு தினங்களுக்கு முன்பு குழந்தை பானு ஏதோவிளையாட்டாக மாடியில் நீலாவின் அறைக்குள் சென்று விட்டாள். அங்கு இருந்த பொருள்கள் யாவும் அவளுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். நீல வர்ணத்தில் இருந்த சோட்புப் பெட்டியை அவள் எடுத்து அழகு. பார்த்துக் கொண்டிருக்கும்போது நீலா வந்து விட்டாள்.
நீலா சித்தி என்றால் பானுவுக்கு மிகவும் பயம். கைகள் பதற பெட்டியைப் கீழே போட்டு