எதுவுமின்றி, கோவில் நிர்வாகிகளையும் அர்ச்சகரையும் கைது செய்து விசாரிப்பது, சட்ட விரோதம்.
உடனடியாக, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படாவிட்டால், நான் பொதுநல வழக்கு, தாக்கல் செய்யத் தயங்கமாட்டேன். ......."
மறுநாளே அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு, ஏமாந்தூர் கோவில் சம்பந்தப்பட்ட விசாரணையும் வழக்கும், விசாரணைக் கமிஷன் ஆய்விலிருந்து விலக்கிவிட, முடிவாகியது.
அதன்படி, கைதானவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களில் தீட்சதரும் ஒருவர்!
கூட்டம் கூட்டமாக மக்கள் அவர் வீட்டுக்கு வந்து, மன்னிப்பு கேட்டனர்.
" எல்லாம் அந்த ராமசந்திரமூர்த்தியின் திருவிளையாடல்! அவன் செய்கிற செயல்களுக்கு நம்மால் காரணம் கண்டுபிடிக்க முடியாது. அதனால், எது நடந்தாலும், அதை மௌனமாக ஏற்றுக்கொள்வதே நமக்கு நல்லது! கூடுகிற மேகங்கள், சிறிது நேரத்தில் கலைந்துவிடுவதுபோல, நம்மைத் தீண்டும் சோதனைகளும் ஐயன் அருளால், விரைவில் விலகிவிடும்! பொறுமையுடன் இருக்கவேண்டும்.
எல்லோரும் நல்லவர்களே! ஆட்டுவிப்பவன் ஆட்டுவித்தால், ஆடாதார் யாரே கண்ணா! என்ற பாடலை நினைவில் கொள்ளுங்கள்!