கட்டியை கரைக்கிறவை அல்ல! அதனால்தான் சொல்கிறேன், இது தெய்வம் உங்கப்பாவின் நேர்மைக்கு தந்திருக்கிற பரிசு! சந்தேகமேயில்லை!"
தியாகு டாக்டரிடம் ஹோமியோபதி சிகிச்சை பற்றி தெரிவிக்கவேயில்லை.
ஆறு மாதங்கள் கழிந்தன, மறுபடியும் டெஸ்ட்!
" தியாகு! ரமண மகரிஷிக்குக்கூட தெய்வம் புற்றுநோய் கட்டியை குணப்படுத்தவில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன், உங்கப்பாவுக்கு தெய்வம் பரிபூரண ஆசிகள் இருக்கு, கட்டி முழுவதும் கரைந்துவிட்டது, எப்படி?" என டாக்டர் வியந்து சிகிச்சையை முடித்துக்கொண்டார்.
" சோமு! இந்தா பிடி! நீ கடனாக சமயத்தில் கொடுத்து என் மகளை வாழவைத்த பணம்! தெய்வம்போல வந்து என்னை காப்பாற்றின பெருந்தன்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!" என்று வீராசாமி கண்ணீர் விட்ட அதே நேரத்தில், தியாகு டாக்டர் கோபிகாரின் எதிரில் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தான்!