'வாடகை தோழி' யா ஒரு மணி நேரம் நம்ம வீட்டிலே வந்து என்னோட பேசிக்கிட்டிருப்பாங்க! ......"
" மேம்! சாருக்கு சம்மதமான்னு கேளுங்க!"
மறுபடியும் ரஞ்சனி விஷமத்தனமாக நரேனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.
"கேட்கறாளில்லே, சொல்லுங்க! சம்மதந்தானே?"
" இத பார், நிர்மல்! இது பொம்பளை சமாசாரம். 'வாடகை தோழி'யா அவங்களை தின வாடகை நூறு ரூபாய்க்கு வைச்சுக்கிறதுலே, அதுவும் இங்கே நான் 'வாக்கிங்' வர நேரத்திலே, வைச்சுக்கிறதிலே, எனக்கு டபுள் மகிழ்ச்சி! உம்.....நடத்து!"
" சார்! அப்படி ஒதுங்கிட்டா எப்படி? எனக்கு ஒரு முழு நேர வேலை நல்ல சம்பளத்திலே கிடைக்க உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கேன், என்ன சார்! இந்த அபலைக்கு உதவமாட்டீங்களா?" ன்னு நரேனை வம்புக்கு இழுத்தாள், ரஞ்சனி!
தன்னுடன் உள்ள தொடர்பை எவ்வளவு சாமர்த்தியமாக நீட்டிப்பதற்கு வழி செய்கிறாள் என்பதை உணர்ந்த நரேன், உஷாராகவே, பதில் சொன்னார்.
" நல்லா படிச்சும், வேலையில்லாம ஏழ்மையிலே இருக்கிறவங்களுக்கு உதவி செய்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி! ஆனா, இப்ப நான் ரிடையராயிட்டேன். நேரடியா எதுவும் செய்யமுடியாது, நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன். அவங்களை ஆண்டவன் எப்படியாவது காப்பாற்றுவார், இப்ப உன்னை சந்திக்க வைத்ததுபோல!"
" சரி, நாங்க பேசிக்கொண்டிருக்கிறோம், இங்கேயே! நீங்க மீதி ஏழு சுற்று நடந்து முடிங்க, போங்க!"
நரேன், திருப்பதி மலையானை கிரிவலம் வந்ததுபோல, மகிழ்வுடன் நடந்தார்!