(Reading time: 13 - 26 minutes)

 தாயும் தந்தையும் மகளை அணைத்து, முத்தமிட்டனர்.

 மகளோ, இருவரையும் உதறித் தள்ளிவிட்டு, தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டாள்.

 " ரேணு! நீ என்னமோ சொன்னே, அவ ஒண்ணுமே பேசாம ரூமுக்குள்ளே போய்ட்டா.......?"

 " கொஞ்சம் கொஞ்சமாத்தாங்க, சகஜ நிலமைக்கு வருவா....."

 கணவனிடம், அவள் நடந்ததை விவரமாகச் சொன்னாள்.

 " ரேணு! சித்ரா கூட படிச்ச அவ சிநேகிதி யாரையாவது கேட்டுப் பார்ப்போமா, எதனாலே நம்ம பொண்ணு இப்படி இருக்கான்னு?"

 " சித்ரா படிப்பு முடிச்சு மூணு வருஷமாயிடுத்து, இப்பல்லாம் அவ எந்த சிநேகிதியோடும் நெருக்கமாப் பழகறதில்லே..."

 " ஆங்! தினமும் நியூஸ்பேப்பரிலே வர்ற எல்லா செய்திகளையும் ஒண்ணுவிடாம படிப்பா,,,,இன்னிக்கிக்கூட படிச்சா....ஆனா, முன்னேபோல ஆழ்ந்து படிக்கலே, சும்மா ஒரு தரம் புரட்டிவிட்டு தூக்கி எறிஞ்சிட்டா!......"

 " ஆங்! இதுவாகத்தாங்க இருக்கணும், நிச்சயமா!"

 "எது, எது, சொல்லு!"

 " அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஆசை வந்திருக்கணும், இதை புரிஞ்சிக்காம நாம ரெண்டு மரமண்டைகளும் வேறெதையோ யோசிக்கிறோம், உடனே எடுங்க அவ ஜாதகத்தை, ஜோசியரிடம் காட்டி, ஜாதகரீதியா ஏதாவது தோஷம் இருக்கான்னு பார்ப்போம்........"

 " ரேணு! என்ன பேசறே? அவ உயிரோட இருக்கணுமா, வேண்டாமா?"

 " ஓ! அதை மறந்துட்டேனே......"

 " எப்படி உன்னால அதை மறக்க முடியும், பெற்றவடீ, நீ! நமக்கு இருக்கிறது, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு, இவ ஒருத்திதான்! நாம உயிர் வாழறதே, இவளுக்காக மட்டுமே! உண்டா, இல்லையா?"

 " ஆமாங்க! அவளுக்கு ஐந்து வயதானபோதே, மூச்சுவிட முடியாம குழந்தை திணறியபோது, டாக்டர் டெஸ்ட் பண்ணிட்டு, சொன்னதை மறக்கலீங்க, எந்த விஷ பரீட்சையும் வேண்டாம்........."

 " அவளுக்கு கல்யாணமே வேண்டாம், அவ உயிரோடிருந்தா போதும்!"

 " அது சரிங்க, உண்மை தெரியாம, குழந்தை என்ன நினைப்பா, நம்மைப் பற்றி! அவளைப்பற்றி, அவ சந்தோஷத்தைப்பற்றி நாம கவலையே படலைன்னு நினைப்பாளே, அதை எப்படி சமாளிக்கிறது?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.