ஜெயிக்கிறவரை நம்ம கட்சி வேட்பாளராக்கிட்டா, நம்ம கட்சிபலம் கூடிடும்.
பிறகு, பார்த்துக்கலாம், அவரை மேயராக்குவதா, இல்லை கட்சியிலே பல வருஷமா பாடுபடறவங்களுக்கு மேயர் பதவி தரலாமான்னு யோசிப்போம்னு திட்டம் போட்டு வேலை செய்வாங்க!
எல்லாம் நம்ம தலையெழுத்து!"
" பார்வதி! இப்பவும் ஒண்ணும் குடி முழுகிடலை, அவங்க கட்சியிலே சேரத்தானே கையெழுத்து போட்டிருக்கேன், கௌன்சிலர் தேர்தல்லே நிற்கமாட்டேன்னு சொல்லிடுவோம்......"
" நீங்க சொல்லணுங்கற அவசியமே இல்லை! அந்தக் கட்சிக்காரங்களே உங்களை ஓரங்கட்டத்தானே, இந்த நாடகம் நடத்தியிருக்காங்க! அவங்க உங்களை தேர்தல்லே நிக்கவைக்கப் போறதில்லே, கட்சியிலே ரொம்ப வருஷமா இருக்கிற ஒருத்தரை நிக்கவைச்சு உங்க ஆதரவோட அவரை ஜெயிக்கவைக்கத்தானே இந்த பிளான்! ஏமாந்துட்டீங்களே, தலைவரே!"
பேசிக்கொண்டே உள்ளே வந்த பரமசிவத்தை தம்பதிகள் இருவரும் பார்த்து விழித்தனர்!
" தலைவரே! நல்லவங்களா இருந்தா மட்டும் போதாது, வல்லவர்களாகவும், சூதுவாது புரிந்தவர்களாகவும் இருக்கணும், இந்தக் காலத்திலே!"