" காலைலே, குளித்து விட்டேன்....." " அந்தக் குளியல், உங்க வீட்டிலே, இப்ப எங்க வீட்டில் நுழைய இங்கே மறுபடியும் குளிக்கணும்....."
" பாத்ரூம் வீட்டுக்குள்ளே இருக்குங்களே....."
" அந்த பாத்ரூம், எங்கள் உபயோகத்துக்கு! வேலைக் காரங்க பாத்ரூம் அதோ, ஒரு மூலையிலே இருக்கு பார்! அங்கே குளிச்சிட்டு வா!"
" ஐயா! மாற்றுத்துணி துவட்டிக்க துண்டு எதுவும் இல்லீங்களே..."
" குடிசைக்குப் போய், எடுத்து வா!"
" ஐயா! குளித்தபிறகு, என் பழைய துணி, துண்டை உங்க வீட்டுக்குள்ளே எடுத்து வரலாங்களா?"
" அதெப்படி? அதை வெளியிலே வச்சிட்டு நீமட்டும் உள்ளே வா! முகத்துக்கு நல்ல கவசம் போட்டுக்க! வீட்டுக்கு வெளியே பக்கெட்ல தண்ணி இருக்கும், டெட்டாலும் இருக்கும், கை கால் கழுவிக்கிட்டு உள்ளே வா! போய்ட்டு சீக்கிரம் வா!"
" ஐயா! குழந்தைங்க பசியிலே துடிக்குதுங்க, பணம் கொஞ்சம் கொடுங்க, என் சம்பளத்திலே பிடிச்சுக் கிட்டு மிச்சத்தை மாசக் கடைசிலே கொடுங்க..."
" இல்லை, இல்லை, நீ சரிப்பட்டு வரமாட்டே, உனக்கு வேலை கிடையாது, போ, இங்கிருந்து முதல்லே!"
" சரிய்யா! பணம் தர வேண்டாம், வேலைக்கு வரேங்க!"
ஓடிப்போய் குடிசையில் இருந்த மாற்றுத்துணி, துண்டு பையில் வைத்துக்கொண்டு திரும்பி வந்தேன்.
அங்கிருந்த செக்யூரிடி யிடம் நடந்ததை சொல்லி, பாத்ரூம் வசதி கேட்டேன்.
" நல்லாருக்கே கதை! அது எங்களுக்கு மட்டும்தான்! வேலைக்காரிங்க, குளிக்க அனுமதி கிடையாது!"
" ஐயா! இப்படி எல்லாரும் எங்களை விரட்டினா, நாங்க ஆற்றிலே குளத்துலே விழுந்து சாகவேண்டியதுதான், தயவு பண்ணுய்யா!"
" இத பார்! ஒரு நாளைக்கு வேணுன்னா, சரின்னு சொல்லலாம்! தினம் குளிக்க அனுமதி தந்தா, என் வேலை போயிடும், போ! போ!"
" அப்படிச் சொல்லாதே ஐயா! இன்னிக்கி ஒரு நாள் அனுமதி கொடு! நாளைக்கு என்ன செய்யலாங்கறதுன்னு பிறகு யோசிக்கலாம்..."
" சரி, யாரிடமும் சொல்லாதே! இன்னிக்கி ஒரு நாள் மட்டும், குளி! இந்தா, சாவி! பூட்டைத் திறந்து உள்ளே போய்ட்டு, பூட்டு சாவியை வெளியிலே வச்சிடு! குளிச்சிட்டு வரபோது, பூட்டி சாவியை என்னிடம் கொடு!"