அருந்தினாள் அதன் ருசி அமோகமாக இருக்க
”ஆஹா சூப்பர் ஆன்ட்டி” என பாராட்ட வைதேகிக்கு உற்சாகமாக இருந்தது
”ஆன்ட்டி உங்க வீட்டை சுத்தி பார்க்கலாமா”
”கண்டிப்பா வாம்மா” என சொல்ல அவளும் அந்த அறையை விட்டு வெளியேறும் முன் பாத்ரூம் வாசலில் நின்று
”ஹலோ”
”யாரு”
”நான்தான் மலரு”
”நீ இன்னும் கிளம்பலையா”
”அப்ப நான் போறவரைக்கும் உள்ளயே இருப்பியா”
”இருப்பேன்”
”அய்யோ பாவம் சரி சரி நான் கிளம்பறேன் வெளிய வா” என சொல்லிவிட்டு அவள் வெளியே வீட்டை சுத்திப் பார்க்கச் செல்ல சரவணனும் சில நொடிகள் கழித்து கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தான், அங்கு மலர் இல்லாமல் போனதை நினைத்து நிம்மதியானவன்
”ப்பா என்ன பொண்ணுடா இவள் அம்சமா இருந்து ஆளையே அசத்திப் போடறாளே, ஊசி போட்ட வலி கூட இப்ப தெரியலை அவள் கண்ணு என்ன அப்படியிருக்கு பவர்புல் கண்கள் அப்படியே என்னை சாச்சிப் போட்டுட்டா அவளோட ஒத்த சிரிப்புக்கு முன்னாடி நான் காலி” என அவனாக பேச அதைக்கேட்டபடி சட்டென உள்ளே வந்தாள் மலர் அதைக்கண்டு வாயடைத்துப் போனான் சரவணன்