”இப்படியெல்லாம் பார்க்க கூடாது”
“ஏன்”
”எனக்குப் பிடிக்கலை”
”ஏய் உண்மையை சொல்லு நான் பார்த்தா உனக்குப் பிடிக்கலையா”
”ஆமாம்” என்றான் தலைதாழ்த்திக் கொண்டு
“பொய் சொல்லாத எங்க என் முகத்தைப் பார்த்து சொல்லு, என் கண்ணை பாரு உனக்கு பிடிக்கலை“ என கேட்க அவனும் தயக்கத்துடனே அவளை ஏறிட்டுப் பார்த்தான். அழகான முகம், கவர்ச்சியான கண்கள், மென்மையான சிரிப்பு அதில் அவன் மனம் தடுமாற அவனோ நெளிந்தான்
”என்னடா நெளியற என்னாச்சி”
”எனக்கு பாத்ரூம் வருது” என சொல்லிவிட்டு அவசரமாக ஓடினான், அதைக்கண்டு சிரித்தாள் மலர் அவளின் சிரிப்பை கேட்டபடி வந்த வைதேகியோ
”என்னம்மா சிரிக்கற ஆமா எங்க சரவணன் ஆளைக்காணலை“
”என்னை பார்க்க பயந்து பாத்ரூம்ல ஒளிஞ்சிருக்காரு உங்க வீரமகன்” என கிண்டலடிக்க வைதேகியோ
”அட அவன் அப்படித்தான், அவனுக்கு ஆஸ்பிட்டல்னா பிடிக்காது, டாக்டர்ஸ்னா பிடிக்காது, ஊசின்னா பிடிக்காது, என்ன செய்றது இன்னும் இவன் சின்னப்பிள்ளையாவே இருக்கான்”
”நல்லா செல்லமா வளர்த்திருக்கீங்க ஆன்ட்டி” என சொல்லிக் கொண்டே அவர் தந்த காபியை