”இதோப்பா ஆச்சி” என சொல்ல மலரோ
”ஆன்ட்டி பொறுமையாவே வாங்க ஒண்ணும் அவசரமில்லை, நான் நிதானமாவே வீட்டுக்கு போறேன்“ என சொல்ல
”அப்படியா சரிம்மா சரி” என வைதேகி குரல் தர சரவணனோ மலரை பார்த்து
”ஹால்லயாவது போய் இரு, இல்லை அம்மாகிட்ட போய் இரு இங்க இருக்காத”
”ஏன் இங்க நான் இருந்தா உனக்கென்ன பிரச்சனை”
”இது என் பெட்ரூமு” என இழுத்து பேசினான்
”சரி” என அவளும் இழுத்துச் சொல்ல
”சொன்னா புரிஞ்சிக்கயேன் வயசு பையன் இருக்கற ரூம்ல வயசு பொண்ணு நீ இப்படி வரலாமா தப்பில்லையா” என கேட்க அவளுக்கு சிரிப்பாக இருந்தது
”என்ன சிரிப்பு”
”இல்லை பொண்ணுங்க சொல்றதையெல்லாம் நீ சொல்ற வேடிக்கையா இருக்கு”
”ப்ச் போயேன்”
”முடியாது என்ன செய்வ” என சட்டமாக அமர்ந்து அவனையே பார்த்தாள் ஆசையாக, அவனுக்கு கூச்சமாகிப் போனது
”மலரு”
”ம்“