“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ப்ரீதா... ஐ லவ் யூ...” என்றான்.
“ப்ச்... வாட் இஸ் திஸ் வினய்? நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... நீங்க கூட இவ்வளவு சீப்பா? பட் டு ஆன்சர் யு, ஐ டோன்ட் இவன் லைக் யூ... அப்புறம் காதலாவது கத்தரிக்காயாவது...”
கடந்து போன இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ முறை இதே நிகழ்ச்சியை நினைத்து பார்த்திருக்கிறாள்... உண்மையில் சொல்ல போனால் தினம் தினம் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வினய்யும் கூடவே இந்த காட்சியும் அவளுடைய நினைவில் வர தான் செய்கின்றன...
ஒவ்வொரு முறையும் அவள் மனதில் கூடவே தோன்றும் கேள்வி ஒன்றே ஒன்று தான்! ஏன் அப்படி பட்டென்று அவனை பிடிக்கவில்லையென்று முகத்தில் அடித்தது போல் சொன்னாள்?
அன்று அப்படி பேசியதற்கு அவளிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தன ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை அதை பற்றி சிந்தித்து தன்னையே கேள்வி கேட்டு கடிந்துக் கொண்டிருக்கிறாள் அவள்... மென்மையாகவாவது மறுத்திருந்திருக்கலாம்!
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், பழைய நிகழ்வை நினைத்துக் கொண்டிருப்பதால் பலன் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, தன்னுடைய செல்லங்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பினாள்.
பிரீதா வயது முதிர்ந்தவரான செல்லம்மாவிற்கு கம்பானியனாக அந்த வீட்டில் பணி புரிகிறாள். செல்லம்மாவின் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லா வேலைகளிலும் உதவி செய்வது தான் அவளின் வேலை... பெங்களூருவை விட்டு சற்றே தள்ளி இருந்த அந்த வீட்டில் அவர்கள் இருவரை தவிர மற்ற வேலைகள் செய்ய வேலை ஆட்கள் இருவர் இருந்தனர்.
உண்மையில் மாதமொருமுறை செல்லம்மாவின் பூர்வீக நிலங்கள் குறித்த கணக்கு வழக்குகள் பார்ப்பது தவிர அவளுக்கு பெரிதாக இங்கே வேலை எதுவும் இல்லை... மற்றபடி ஒவ்வொரு நாளும் செல்லம்மாவிற்கு செய்திகள் படிப்பது, தொலைக்காட்சி பார்க்கும் போது கூட