(Reading time: 20 - 39 minutes)
சிறுகதை - காதல் கதை - பிந்து வினோத்
சிறுகதை - காதல் கதை - பிந்து வினோத்

அவன் சொல்வது சரி தான்... ஆனால் கல்லூரியில் மதிப்பெண், பின் வேலை தேடும் போது இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என அனைத்தும் வந்து அவளை பயமுறுத்தின. வினய்யிடம் இனம் புரியாத எரிச்சலும் கோபமும் எழுந்தது...

   

அதன் பின் அவள் அந்த நிறுவனத்தில் இருந்து கிளம்பிய கடைசி நாளில் தான் வினய் அவளை தனியாக பேச வேண்டும் என்று அழைத்து அவனின் காதலை சொன்னது. மனதில் குமுறிக் கொண்டிருந்த கோபத்திற்கு, பழி வாங்க அவனே ஒரு வாய்ப்பை கொடுக்க, அவனின் முகத்தில் அடிப்பதை போல் பதில் சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பினாள் அவள்!

   

ஆனால் வினய் சொன்னது போலவே அந்த ஒன்றிரண்டு சிறு பிழைகளினால் எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் அவளுக்கு மதிப்பெண் மட்டும் அல்லாமல் உடனேயே வேலையும் கிடைத்தது.

   

அவளுக்கு உறவென இருந்த தந்தைக்கு இனியாவது எல்லாம் செய்ய வேண்டும் என்று அவள் நினைக்கும் போதே எதிர்பாராத விதமாக அவர் ஒரு விபத்தில் காலமாக, பிரீதா யாருமற்று தனியாக நின்றாள்! 

   

ஆனால் பெரிய நிறுவனத்தில் கிடைத்திருந்த அக்கவுண்டன்ஸ் துறை வேலை மனதில் தன்னபிக்கை கொடுக்க, தனியே இருப்பதை பற்றி பிரீதா பெரிதாக பயம் ஏற்படவில்லை. சிறு வயது முதலே வளர்ந்த வீடு, நன்கு பழக்கமான அக்கம் பக்கம் உள்ள மக்கள் என்ற தைரியம்...

   

அந்த தைரியம் ஒரு முழு மாதம் கூட நிலைத்திருக்கவில்லை! அது வரை அண்ணா, மாமா என்று அன்புடன் அவள் அழைத்து பழகி இருந்தவர்கள் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கி இருந்தனர். பெண்ணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வில், அவர்களின், பேச்சு, பார்வை, நடவடிக்கைகளில் வேறுபாடு தெரியவும், பிரீதாவின் மனதில் சிறு பயம் தோன்ற செய்தது...

   

அப்போதும் கூட ஏதாவது ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு செல்வது என்று தான் அவள் முதலில் நினைத்தாள். ஆனால் அவளின் கம்பெனியில் நடைபெற்ற ஒரு விழாவில் மது அருந்தி விட்டு அவளின் துறை மேலாளரே அவளிடம் தவறாக பேசி, நடக்க முயற்சிக்கவும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.