இன்று பிப்ரவரி பதினான்காம் தேதி! உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப் படும் நாள்...
சமையலறையில் கணவன் விஷ்ணுவிற்காக மதிய உணவைக் கட்டிக் கொண்டிருந்த பிருந்தா, உணவறையில் அவசர அவசரமாக காலை உணவான இட்லியை விழுங்கிக் கொண்டிருந்த கணவனை பார்த்தாள். விஷ்ணு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறான். கை நிறைய சம்பளம் வந்தது... ஒரு சின்ன கெட்ட பழக்கமும் இல்லை... தோற்றத்திலும் எந்த குறையும் இல்லை… பார்க்க கம்பிரமாக மிடுக்குடன் இருந்தான்... அவள் மீதும், குழந்தைகள் இருவர் மீதும் அளவில்லாத அன்பு வைத்திருந்தான்... மொத்தத்தில் ஒரு சிறந்த குடும்ப தலைவனாக இருந்தான்...
ஆனாலும் பிருந்தாவின் மனதினுள் ஒரு சிறு குறை மட்டும் இருந்துக் கொண்டே இருந்தது... பிறந்தநாள், பண்டிகைகள் என எந்த சிறப்பு நாளிலும் விஷ்ணு எந்த விதமான குறையும் வைத்ததில்லை.... எப்போதும் அவள் கேட்பதை அவன் உடனே வாங்கி தருவான் என்பது அவளுக்கு தெரியும்... விலை உயர்ந்த பொருளாக கேட்டாலும் கூட முகத்தை சுழிக்காது வாங்கி தருவான்..
ஆனால் அவள் படித்த காதல் கதைகளில் அப்படி இல்லையே... மனைவி சொல்லாமலே கணவன் அவளின் மனமறிந்து அல்லவா பரிசுகளை வாங்கி தர வேண்டும்!
ஏனோ விஷ்ணு இன்று வரை எதையுமே அவள் சொல்லாது அவளுக்கென வாங்கி தந்ததில்லை... அவளாக கேட்டு பெற்றுக் கொள்ளும் வைர மோதிரத்தை விட அவனாகவே வாங்கி தரும் சின்ன ரோஜாப் பூவும் கூட அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும்... அது அவனுக்கு ஏன் இன்னமும் புரியவில்லை?
திருமணமான இந்த ஆறு ஆண்டுகளில், அவளுடைய பிறந்தநாள், அவர்களின் திருமணநாள் என்று ஒவ்வொன்றிருக்கும் அவனிடம் இருந்து ஏதாவது ‘சர்ப்ரைஸ் கிப்ட்டை’ எதிர்பார்த்து அவள் ஏமாந்து போய் கொண்டிருந்தாள்... ஒவ்வொரு வருடமும் அது போன்ற சிறப்பு நாட்களில் அவளை கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ள சொல்வான் விஷ்ணு...
பல பல கதைகளை படித்து, திரைப்படங்களை பார்த்து ஏதேதோ எதிர்பார்த்திருந்த பிருந்தாவிற்கு இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தன் கணவன் அது போல் ‘ரொமேன்ட்டிக்’ ஹீரோவாக இல்லையே என்ற ஏமாற்றம் இருந்தது...
மனதினுள் வருத்தம் இருந்தாலும், அவள் இதுவரை அவனிடம் அதை பற்றி சிறு கோடிட்டு கூட காட்டியதில்லை...
“பிருந்தா நான் கிளம்புறேன்... கதவை தாள் போட்டுக்கோ...”
அவளின் கையில் இருந்த லஞ்ச பேக்கை வாங்கியப் படி அவன் சொன்னதில் நனவுலகிற்கு வந்தவள்,
“பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க...” என்றாள்.
ஒரு சின்ன புன்னகையுடன் தலை அசைத்தவன்,
“என்ன ஆச்சு, ஏதோ யோசிச்சிட்டு இருந்த போல இருக்கு...”
ஒரு சில வினாடிகள் தயங்கிவிட்டு,
“பெரிசா ஒண்ணுமில்லை... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே...” என்றாள் புன்னகையுடன்.
“ஓ! ஆனால் நமக்கு இது போல் தனியா ஸ்பெஷல் டே எதுவும் வேண்டாமே நமக்கு எல்லா நாளும் காதலர் தினம் தானே?”
கண்சிமிட்டலுடன் சொன்னவன், மனைவியின் முகம் சிவப்பதை பார்த்து ரசித்தப் படியே நின்றான்.
ஆறு வருடங்களான பின்பும், கணவனின் குறையாத காதலிலும், அந்த காந்த பார்வையிலுமாக மனதினுள் எழுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் வெளி காட்டாதிருக்க முயன்றபடி,
“போதும் போதும், பார்த்தது, கிளம்புங்க, டைம் ஆச்சு...” என்றாள்.
“ம்ம்ம்... சரி கிளம்புறேன்... ஈவ்னிங் உனக்கு ஏதாவது வாங்கி வரணுமா?”
நீயாக எதை வாங்கி வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று மனதினுள் நினைத்தவள், அதை சொல்லாது,
“ப்ச்... அது மட்டும் தான் குறைச்சல்... எனக்கு எதுவும் வேண்டாம்...” என்றாள்.
ஒரு வினாடி ஆச்சர்யமாக பார்த்தவன், நேரமாகி விட்டதை உணர்ந்து மேலும் எதையும் கேட்காது கிளம்பினான்.
அதன் பின் பிருந்தாவிற்கு நேரம் இறக்கை கட்டி பறந்தது... இரட்டையர்களான அவர்களின் குழந்தைகளை செல்லம் கொஞ்சி, மிரட்டி, அதட்டி என பல் துலக்கி, குளிக்க வைத்து, உணவு ஊட்டி விட்டு, பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தவள், மீண்டும் மதியம் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்து, அவர்களுக்கு உணவு ஊட்டி விட்டு, தூங்க வைத்து, மாலை சிற்றுண்டி கொடுத்து முடித்த போது விஷ்ணு வீடு திரும்பினான்...
காலை ஷிப்டில் பணி புரிவதால், காலை ஆறு மணிக்கு சென்று மாலை மூன்றரைக்கு வீடு திரும்புவான் விஷ்ணு. அன்றும் நேரத்திற்கு திரும்பியவனிடம் ஒரு சிறு பூவையாவது எதிர்பார்த்து ஏமாந்து போனாள் பிருந்தா.
இரவு, கதை கேட்டபடி தூங்கி போன குழந்தைகளை படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டவள், கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி டி.வியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்த கணவனின் அருகில் சென்று அமர்ந்தாள். அதற்காகவே காத்திருந்தவன் போல்,
“என்ன விஷயம் கண்ணா, ஏன் இன்னைக்கு டல்லா இருக்க?”
“அதெல்லாம் ஒன்னுமில்லையே....” மனதிலிருப்பதை சொல்லாமல் மறைத்து பொய் சொன்னாள் அவள்.
“இல்லை நீ காலையில் இருந்தே வித்தியாசமா தான் இருக்க... உடம்பு ஏதாவது சரி இல்லையா?”
“ப்ச்...”
“ஏன் இந்த அலுப்பு?”
“ஒன்னுமில்லை...”
“என்னவோ இருக்கே செல்லம்...”
“க்கும்... இந்த செல்லம் கொஞ்சலுக்கு எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை...”
“வேற எதில் குறைச்சல்?” ஒரு புன்னகையோடு கேட்டவன், எப்போதும் போல் அவளின் வலது கரத்தை எடுத்து, அதில் மணிக்கட்டின் சற்று கீழே இருந்த அந்த தழும்பை வருடினான்.
“ப்ச்.. கையை விடுங்க எனக்கு தூக்கம் வருது...”
“ம்ம்ம்... தூங்கு, ஆனால் அதற்கு முன் உன் மனதில் இருக்கும் அந்த ஏதோ ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லு...”
“க்கும்... உங்களுக்கு என்னை பற்றி ரொம்ப தெரியுமாக்கும்... நீங்கள் சொல்வது போல் எல்லாம் ஒன்றுமில்லை...”
என்றுமில்லாத அதிசயமாக அடம் பிடிக்கும் மனைவியை ஆச்சர்யமாக பார்த்த விஷ்ணு,
“எனக்கு உன்னை பற்றி தெரியாதுன்னு யார் சொன்னது?”
“யார் சொல்லனும்? எனக்கே தெரியும்! இது வரைக்கும் ஒரு தடவையாவது எனக்கு என்ன பிடிக்கும்னு புரிந்து என்னை கேட்காமல் நீங்களே ஒரு குண்டூசியாவது வாங்கி கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்தியதா சரித்திரம் உண்டா?”
“பிருந்தா!”
I became a big fan of short romantic stories!
Excellent
perfect lines at the end
hatsoff to you sister
kadala romba alaga sollirik
Romba alagana kadhal kathai.... romba pidichirunthuchu enaku.... vazhkai ipadi iruntha rombave nalla irukum thaan... aathmaarthamaana kadhal ipadithan irukanum nejama.....
thank you mam, ipadi oru kathai padika kuduthatharku... :)
Ippadi ellam comments sonnal I don;t know how to reply
Marakkamal PP padichittu unga comments sollunga... Athu than ennoda first series
Athu enna short stories mattum?
naan ellam 5-6 yrs wait seithu feel seiyum heroine illai madam, kalyanam fix aana udaneye ithu thaan pidikkumnu thelivaa solra villi range
Thanks for your comment
Now no one can question Vindhya for writing the truth in the Team intro page :)
Yar athu antha one like koduthathu... kandupidikkiren irunga :)
Thank you Bala
Role model'nu solla mudiyathu but I like her stories. Yen ketkureenga?
Unga kitta poi Feb 14'kku story publish seiyya sollalaama? Athu evvalavu periya thavaru? Neengale sema busy'a iruppeenga