தயங்கிவிட்டு,
“சாரிங்க உங்க மனசில் இருக்கும் அன்பை புரிஞ்சுக்காமல் நான் தான் லூசுத்தனமா பேசிட்டேன்... சாரி...”
“ம்ம்ம்... தப்பா இருக்கே!”
“என்ன?”
“கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் எப்படி சாரி கேட்கனும்னு கூட உனக்கு தெரியலையே... இது சரியே இல்லையே...”
“க்கும்... இந்த சின்ன ப்ளாஷ்பேக் சொல்ல உங்களுக்கு ஆறு வருஷம் ஆச்சு...இதில் இந்த பேச்சுக்கு எல்லாம் குறைச்சலில்லை...”
“ஹேய்! இனிமேல் பார் உன்னை நான் ஆச்சர்ய கடலில் ஆழ்த்திட்டே இருக்க போறேன்...”
“பார்ப்போம் பார்ப்போம்...” என்ற பிருந்தாவின் மனது கணவன் தர போகும் ஆச்சர்யங்களை விட அவன் மனதை வென்ற கதையை கேட்ட ஆச்சர்யத்தில் மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது!
காதல் குறையே இல்லாததாக இருக்க வேண்டுமென்றில்லை... ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும்!
❀✿❀✿❀✿