நாட்களில் அவளை கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ள சொல்வான் விஷ்ணு...
பல பல கதைகளை படித்து, திரைப்படங்களை பார்த்து ஏதேதோ எதிர்பார்த்திருந்த பிருந்தாவிற்கு இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தன் கணவன் அது போல் ‘ரொமேன்ட்டிக்’ ஹீரோவாக இல்லையே என்ற ஏமாற்றம் இருந்தது...
மனதினுள் வருத்தம் இருந்தாலும், அவள் இதுவரை அவனிடம் அதை பற்றி சிறு கோடிட்டு கூட காட்டியதில்லை...
❀✿❀✿❀✿
“பிருந்தா நான் கிளம்புறேன்... கதவை தாள் போட்டுக்கோ...”
அவளின் கையில் இருந்த லஞ்ச பேக்கை வாங்கியப் படி அவன் சொன்னதில் நனவுலகிற்கு வந்தவள்,
“பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க...” என்றாள்.
ஒரு சின்ன புன்னகையுடன் தலை அசைத்தவன்,
“என்ன ஆச்சு, ஏதோ யோசிச்சிட்டு இருந்த போல இருக்கு...”
ஒரு சில வினாடிகள் தயங்கிவிட்டு,
“பெரிசா ஒண்ணுமில்லை... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே...” என்றாள் புன்னகையுடன்.
“ஓ! ஆனால் நமக்கு இது போல் தனியா ஸ்பெஷல் டே எதுவும் வேண்டாமே நமக்கு எல்லா நாளும் காதலர் தினம் தானே?”
கண்சிமிட்டலுடன் சொன்னவன், மனைவியின் முகம் சிவப்பதை பார்த்து ரசித்தப் படியே