கதிர் வெளிநாட்டிற்கு சென்ற மூன்று நாட்களில் சௌமியாவிற்கு கல்லூரி தோழி வீணா போன் செய்ய, அவளின் குரலிலே ஏதோ சரியில்லை புரிந்துக் கொண்டவள்
“என்ன வீணா, ஏன் உன் குரல் ஒரு மாதிரியாக இருக்கு”
“சௌமி, நான் ஒரு இண்டர்வியுக்காக இங்க வந்தேன். நாளைக்கு செகன்ட் இண்டர்வியு அதனால ஒரு ஹோட்டல் அறை எடுத்துதேன். திடிர்ன்னு காய்ச்சல் என்னாலே எழுந்தரிக்க கூட முடியலே...”
“சரி நான் உடனே அங்கே வரேன்” அவள் தங்கி இருக்கும் ஹோட்டல் பெயரை கேட்டவள் அதிர்ந்தாள். அந்த ஹோடேலில் எப்போதும் ரைடு நடக்கும். தப்பான இடத்தில் போய் மாட்டிக் கொண்டாலே என நினைத்தவள் உடனடியாக அங்கே சென்றாள்.
சௌமியா வந்த டாக்சியை வைத்திங்கில் இருக்க சொல்லி வீணாவை தேடி சென்றாள். அவளை கைதங்கலாக டாக்சிக்கு அழைத்து செல்லும் போது சௌமியாவின் ஹண்ட்பாக் ஹோட்டல் வாசலில் கீழே விழ, அதை எடுக்காமல் வீணாவை டாக்சியில் அமர உதவி செய்தாள்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கீழே விழுத்த என் ஹண்ட்பாக்கை எடுக்கிறேன்” சொல்லி சென்றவளை அங்கே வந்த காவல் துறையினர் கைது செய்தனர்
போலீசை பார்த்த டாக்சியை டிரைவர் அங்கு இருந்து பறந்து விட்டார்.
அவள் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக கேட்டவன்
“சாரி சௌமி என் அழுவகத்தில் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்து செல்ல முடியாது சொல்லி விட்டார்கள், அதனால் தான் உன்னை இங்கே விட்டு சென்றேன்”
“நான் திரும்ப இங்க வந்த பிறகு தான் உன்னை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் தெரிந்தது. நான் மருத்துவமனைக்கு வந்த போது உன்னை அழைத்து சென்று விட்டார்கள். தனியாக பிள்ளைகளை வைத்து கஷ்டப் பட்ட போது ஒரு வயதான அம்மா எனக்கு உதவி செய்தாங்க...”
“அவங்க தான் சிறைச்சாலையில் இருந்து வெளியே வருபவர்களுக்குக் கைத்தொழில் கற்றுக் கொடுகிறார்கள்.. நான் அதை விற்க உதவி செய்யறேன்...” என அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.
அவள் இன்னும் பல கேள்விகள் கேட்க இருப்பது தெரிய
“சௌமி எனக்கு அன்பா பேச தெரியாது, அன்பை இப்படிதான் வெளிபடுத்தனும் தெரியாது... எனக்கு தெரிந்தது என் மனசில தோன்றதை அப்படியே சொல்லிடுவேன்... அது உன்னை ரொம்ப காயப்படுத்தி இருக்கு... ஆனா உன் மேல் அன்பு இல்லன்னு நினைக்காத...” சொல்லி அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
பல நாட்கள் மனதை அரித்த கேள்விக்கு இன்று அவளே கேட்காமல் அவன் விடை அளித்து விட்டான். கேட்க நினைத்த கேள்விகள் எல்லாம் மறந்து விட்டது. அவனின் குரலில் என்ன இருந்ததோ ஆனால் அவளுக்கு மனம் நிறைந்து இருந்தது. நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து வருந்துவதை விட, அதை மறப்பதே நல்லது என நினைத்தவள் கதிரின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
இனி இவர்களின் வாழ்வில் வசந்தம் விசட்டும்!!!
This is entry #21 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.