(Reading time: 20 - 40 minutes)

ன் மகனுக்கு அவமானம் ஏற்படக்கூடாது என்று நினைத்த அவன் அன்னைக்கு இப்போது இவ்வளவு பெரிய அவமானம் ஏற்பட்டதை நினைத்து கவலைப்பட்டு என்னப் பயன்.. இந்த நிலையிலும் குழந்தையை இருவரும் வெறுக்கவில்லை.

முறையான சிகிச்சை மேற்கொண்டதன் பயனாக கதிரவனுக்கு குணமானது, தன் வீட்டில் வேலை செய்யும் பெண் மூலம் அமுதாவை பற்றி அறிந்து கொண்டிருந்தார் பார்வதி, திருமணம் ஆகாத அமுதாவையே கதிரவனுக்கு மணமுடிக்க எண்ணினார், ஆனால் கதிரவன் மறுத்துவிட்டான், அவன் எதனால் இப்படி செய்தான் என்று அமுதாவிற்கு தெரியக்கூடாது... அதுமட்டுமல்லாமல் ஒரு குழந்தைக்கு தாயாக அவள் என்னை மணக்க வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.

சிறிது காலம் சென்ற பின்பு அமுதாவிற்கு நடந்த திருமணம் தோல்வியில் முடிந்ததை அறிந்த பார்வதி தன் மகனிடம் கூறாமல் அவர்கள் கஷ்டத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டார், மகனிடமும் ஒரு கஷ்டப்படும் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தால் அவள் கண்ணனையும் உன்னையும் நன்றாக பார்த்து கொள்வாள் என்று கூறி அது யாரென்று சொல்லாமலேயே அவனை வற்புறுத்தினார், அவனும் சம்மதித்தான்.

இப்படியெல்லாம் பார்வதி செய்ததின் காரணம்.... ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தும் அவர்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தை பார்க்காததால் அவர்கள் மீண்டும் இணைந்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக தான்,

னால் அதை புரிந்து கொள்ளாத கதிரவனும் அமுதாவும் திருமணத்திற்கு பிறகும் விலகியே இருந்தனர், அதனால் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அவரும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றார்.

அப்போது வந்த அவமானத்தை துடைக்க கதிரவனின் உதவியை நாடிய கண்ணனின் தாத்தா... இப்போது தன் பெண்ணும் தன்னுடன் இல்லாததால் கண்ணனை பற்றிய உண்மை தெரிந்தாலும் பரவாயில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், இதை பற்றி அறிந்த பார்வதி உடனே கிளம்பி வந்துவிட்டார்.

இதையெல்லாம் கேட்டு சிலையாக நின்றிருந்த அமுதாவின் கண்ணில் கண்ணீர், உடனே அதைப் பார்த்து பதறிய கதிரவன்,

"அம்மு ப்ளீஸ் அழாதே...."

"அம்மா இதுக்கு தான் நான் அமுதாவிடம் எதுவும் சொல்லாமல் இருந்தேன்.. ஆனால் இப்போது சொல்லும்படியாக ஆகிவிட்டதே..." என்றான்.

உடனே அமுதா " கதிர் உங்களை பத்தி எனக்கு தெரிஞ்சா... நான் உங்களை விட்டு போயிடுவேன்னு நினைச்சு தான் அன்றைக்கு அப்படி நடந்துக்கிட்டீங்களா...???" என்றாள்

"இல்ல அம்மு... உனக்கு எந்த விதத்துலேயும் கஷ்டம் கொடுக்கக் கூடாதுனு நான் நினைச்சேன்... என்ன மன்னிச்சிடு அம்மு.." இன்னும் எத்தனையோ வார்த்தைகளால் அவளை சமாதானப்படுத்த அவனுக்கு அரை நாள் ஆனது.

இனி அவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிட்டது என்றால் அதுதான் இல்லை, கண்ணனின் பிரிவை ஏற்க முடியாமல் இருவரும் தவித்தனர். ஐந்து மாதமே பழகிய அமுதாவிற்கே அவன் பிரிவை ஏற்க முடியாது, அப்போது பிறந்த குழந்தையிலிருந்து அவனை வளர்த்து வரும் கதிரவனால் எப்படி முடியும்... அந்த நிலையிலும் அமுதாவிடம் கதிரவன் நன்றாக பேச முயற்சிக்கிறான், ஆனால் அமுதா தான் அவனிடம் விலகிச் செல்கிறாள்.

ன்று கண்ணனின் வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது என்று கதிரவன் கிளம்பி சென்றான், வழக்கு இவர்களுக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்று கண்ணனையும் பார்வதியையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றாள் அமுதா, கண்ணன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு அவர்கள் வீடு வந்த போது கதிரவன் சந்தோஷமான விஷயத்தோடு அவர்களுக்காக காத்திருந்தான்.

கண்ணனின் தாத்தாவுக்கு ஏற்பட்ட உடல்நல குறைவால் வெளிநாடு சென்று சிகிச்சை பெற போவதால் கண்ணனை அவரோடு வைத்து கொள்ள முடியாது என்று அவர் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் மேலும் முறையாக கண்ணனை தத்து எடுத்து கொண்டால் இனி இப்படி பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும் என்று வழக்கறிஞர் கூறியதாகவும் கதிரவன் கூறியதை கேட்டு அமுதாவும் பார்வதியும் சந்தோஷப்பட்டனர்.

நிம்மதியான மனதுடன் கண்ணனை உறங்க வைத்து விட்டு வந்த அமுதாவிற்காக காத்திருந்தான் கதிரவன், அமுதா அவன் அருகில் வந்ததும் அவளை கட்டிலில் உட்கார வைத்தான். அவள் தலைகுனிந்திருந்தாள்,

"அம்மு.. என் மேல இன்னும் கோபமா..??" என்று கேட்டு அவள் முகத்தை நிமிர்த்திய போது அவள் கண்களில் கண்ணீர், "என்னாச்சு அம்மு..?? ஏன் இப்போ அழற...??" அவன் பதறினான்.

அவள் அழுதுக் கொண்டே "இல்ல கதிர் எனக்கு நல்லதுனு நினச்சு... நான் உங்களை வெறுக்கிற மாதிரி நீங்க நடந்துக்கிட்டீங்க.. ஆனா அது தெரியாம என்னோட வாழ்க்கையை வேற ஒருத்தர் கிட்ட ஒப்படைக்க நினைச்சேனே...?? எனக்கு குற்ற உணர்வா இருக்கு கதிர்"

"என்ன அம்மு நீ... இதுக்குப் போய் அழற... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கனும்னு தான் நான் அப்படி செய்தேன்.. ஆனா நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க... அதுக்கு நீ தான் என்ன மன்னிக்கனும்...

அதுமட்டுமில்ல நானும் தானே வேற ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன்"

அவள் இன்னும் அழுதுக் கொண்டிருந்தாள், "அம்மு... எல்லோருக்கும் அவங்க வாழ்க்கையில் வரும் முதல் காதல் எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை.... நமக்கும் அப்படித்தான் நடந்தது... நம்ம இரண்டு பேரும் வேறொரு வாழ்க்கையை தேடிச் சென்றோம்... ஆனால் யார் செய்த புண்ணியமோ... நீயா... நானா.. இல்ல நம்ம காதலா...!!! நம்ம முதல் காதல் கைகூடியிருக்கு.. நாம ரெண்டுபேரும் மீண்டும் சேர்ந்துட்டோம்... இது எவ்வளவு பெரிய விஷயம்." அவள் அழுதுக் கொண்டே ஆம் என்று தலையசைத்தாள்.

கதிரவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் அருகில் இன்னும் நெருங்கி உட்கார்ந்து "அம்மு... கண்ணன் ரெண்டு நாள் முன்னாடி என்கிட்ட ஒரு கேள்வி கேட்டான் தெரியுமா..??" என்றான்.

அமுதா என்ன என்று வியப்பாக அவன் முகத்தைப் பார்த்தாள், "கண்ணனை நாம ப்ளே ஸ்கூலில் சேர்த்திருக்கிறோமே...?? அங்க அவனுக்கு ரெண்டு ப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்களாம்... அவங்க ரெண்டுப்பேருக்கும் தங்கச்சி பாப்பா இருக்காம்... எனக்கு எப்போ தங்கச்சி பாப்பா வரும்னு என்கிட்ட கேட்டான்.. நான் அம்மாக்கிட்ட கேட்டு சொல்கிறேன் என்று சொன்னேன்" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

அவள் வெட்கத்துடன் சிரித்தாள், அவன் அதைப் பார்த்து ரசித்தான், இதுவரை நரகமாக இருந்த அந்த வீடு இப்போது அவளுக்கு சொர்க்கமாக இனித்தது.

This is entry #10 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.