ம். அவ கூட தான் பேசிட்டு இருக்கேன்.
…….
ம்... சரி டா. அப்புறம் பேசறேன்.
ஃபோனை கட் பண்ணிவிட்டு மதியிடம் திரும்பியவன்
சொல்லு மதி என்றான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, முகிலனே பேசத் துவங்கினான்.
நீ சொன்னது எல்லாம் எனக்கு முன்னமே தெரியும் என,
அவள் அழுதேவிட்டாள். முகிலன் அவள் கையைப் பற்றிக்கொண்டான் ஆறுதலாய்.
அழுகையினூடே எப்படி....? என்று வினவினாள்.
உன் ஃப்ரண்டு ப்ரவீன் தான் சொன்னான்.
எப்போ.... என்கிட்ட அவன் எதும் சொல்லலியே?
எப்படி சொல்லறதாம்... மேடம் தான் யார்ட்டயும் பேசலியே….
சாரி.... ரொம்ப பயமா இருந்தது…..
ம்…. எனக்கு புரியுதுடா.
நீங்க என்னை பார்க்க வந்த அன்னைக்கே உங்கள சிக்னல்ல பார்த்தேன் என்று கூற,
அவள் அதிர்ச்சியுடன் பார்த்தபடி உங்களுக்கு கோவம் வரலியா? என்று கேட்டாள்.
அதிர்ச்சியா தான் இருந்தது, அப்புறம் உன் ஃபேஸ் பார்த்ததும் ஏதோ சரியில்லைனு தோனுச்சு, பேசும் போது கேட்கலாம்னு பார்த்தா நீ பேசவேயில்லை. நேற்று உன்னை பார்க்கனும்னு வீட்டுக்கு வந்த போது வழியில் ப்ரவீன பார்த்தேன். அவன் தான் உன் ஃப்ரண்டு விசயம், அன்னைக்கு என்ன பார்க்க வந்துட்டு பயந்து திரும்பி போனதையும் சொன்னான்.
அப்பவே என்கிட்ட பேசியிருந்தனா இப்படி இரண்டு நாள் பேசாம நாம கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருந்துருக்காது.
ஹ்ம்ம்ம்.... என்று பெருமுச்சுவிட்டவன்,
இனி எதுவா இருந்தாலும் மனசுவிட்டு பேசிடுமா. மனசுலயே வச்சு எத்தனை நாள் இப்படி கஷ்டப்படுவ...... உன்னோட சொந்தக்காரர்கள், சந்தோஷம், துக்கம்னு எல்லாத்தையும் அக்செப்ட் பண்ணும் போது உன் ஃப்ரண்ட மட்டும் அக்செப்ட் பண்ணிக்காம இருப்பனா...? உண்மையான நட்புக்கு ஆண், பெண் வித்தியாசம் தெரியாது. நான் அப்படி தப்பா நினைக்க மாட்டேன். இப்ப அவன் எனக்கும் ஃப்ரண்டு தான் என்று கூறினான்.
மதி இவன் என்னவன் என்ற பெருமிதத்துடன் புன்னகைத்தபடி முகிலனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
பின் ப்ரவீனும் திருமண வேளைகளில் பங்கெடுக்க, நிச்சயிக்கப்பட்ட நன்நாளில் மேளங்கள் முழங்க அக்னியை சாட்சியாக வைத்து முகிலன் மதியின் கழுத்தில் மங்கலநாணை சூட்டி இருவரும் இல்லற வாழ்வை இனிதே துவங்கினார்கள்.
This is entry #12 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}