(Reading time: 22 - 43 minutes)

பொய்”, என்றாள்..

“அப்போ நல்லதா போச்சு! தம் அடிக்கலாம்... சைட் அடிக்கலாம்..”, என்று இவன் அடுக்க..

“நோ.. நோ... அதெல்லாம் கிடையாது”, வேகமாக  கண்டித்தாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,

“இப்படி உன் வாய் பேசுறதை அப்பவே உன் கண்ணு பேசும்! தம் அடிக்கிறதை பார்த்தா அந்த நாள் முழுக்க என்னை பார்க்காம என்னை காய விடுவ!” என்று அவன் சொல்ல இவள் வியந்தாள்.

இவன் புகைப்பது இவளுக்கு பிடிக்காது தான்! எரிச்சல் வரும் தான்! ஆனால், அதை இப்படி வெளிபடுத்தி இருக்கிறேனா! அதை இவன் கவனித்தும் இருக்கிறானா!! என்று வியந்தவளிடம் இவன் மேலும்..

“அவ்வளவு ஏன்.. இன்னைக்கு கூட உனக்கு பிடிச்ச க்ரே கலர் ஷார்ட் தான் போட்டு வந்திருக்கேன்!”, என்று அவன் சொல்ல.. இவள் பார்வை அவன் சட்டையில் விழுந்து..  அவன் முகத்தை தழுவியது..

அவன் சொல்வது உண்மை தான்! சாம்பல் நிற சட்டை அவன் நிறத்திற்கு பொருத்தமாக இருக்கிறது என்ற கணிப்பு அவளுள் ஓடியிருக்கிறது!

அவள் பார்வை ஓட்டத்தை குறிப்பெடுத்து, விருப்பு வெறுப்புகளை கண்டு கொண்டதை அவன் சொல்ல சொல்ல...  மெல்ல மெல்ல உணர்கிறாள் - அவன் அவளுள் கலந்திருந்திருக்கான் என்பதை!

அவளும் என்ன செய்வாள்! அவளுள் இருந்த காதலை உணர கூட முடியாமல் அத்தனை உணர்வுகளும் மரித்திருந்ததே! இன்று, அவனின்  அருகாமையும், பேச்சும் அவள் உணர்வுகளை உயிரூட்டி, அத்தனை செல்களையும் அவன் பால் சாய்க்கிறதே!

பிரம்மிப்புடன் விழி அகலாது பார்த்து கொண்டிருந்தவளின் முகவாயைப் பற்றி காதலால் அவள் விழி கலந்து..

“உனக்குன்னு உள்ள உணர்வுகளை, ஆசைகளை  எல்லாத்தையும் உள்ளுக்குளே புதைச்சிட்டா எனக்கு தெரியாம போயிடும்ன்னு நினைச்சியா?”

கண்ணாடி போல அவள் மனதை பிரதிபலித்தவனை எண்ணி நெகிழ்ந்த பெண் மனம்  அதற்கும்  அழுதது! கண்கள் கலங்க... அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்! அவள் தலை கோதிய படி தொடர்ந்தான் அவன்..

“நல்ல நோக்கத்தோட படிக்க வந்திருக்க.. படிக்கிற பொண்ணை தொந்தரவு செய்ய கூடாதுன்னு கிடைச்ச நாலு வருஷ கேப்ல.. உன் வலியை மட்டும் இல்லை. வாழ்க்கையையும் ஷேர் பண்றதுக்கு தகுதியானவனா என்னை மாத்திகிட்டேன்!”,

என்றவனது நெஞ்சமும் நான்கு வருட தவத்தை கலைத்த திருப்தியில்.. அமைதியாய் அவள் அருகாமையை ரசித்தது..

“உனக்கு ஒன்னு தெரியுமா? யு ஆர் மை ஃபர்ஸ்ட் லவ் அன்ட் ஒன்லி லவ்”

மென் குரலில் சொன்னவன் மொழியில் இருந்தது வினோத் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்  என்றாலும் அது அவள் கடந்த காலத்திற்கு இழுத்து செல்லவில்லை.

ஒருவர் மற்றவர் காதலை உணரும் அருமையான தருணம் இது! அதை இழக்க அவள் விரும்பவில்லை! நிகழ் காலத்திலே லயித்திருந்தவள்..

“நீங்களும் என்னோட ஃபர்ஸ்ட் லவ் அன்ட் ஒன்லி லவ்”, என்றாள் நெஞ்சு நிறைய காதலுடன்..

ஒருவனின் உயிரற்ற காதல் அவள் உருவத்தை சிதைத்தாலும்... மற்றவனின் உண்மை காதல் கருகிப் போன அவள் உணர்வுகளை உயிர்ப்பித்திருக்கிறது!

எந்த அழிவும் முடிவல்ல! ஒரு துவக்கத்தின் அறிகுறி!

திருக்குறள் உரை: அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு. அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்!

This is entry #40 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.