(Reading time: 27 - 53 minutes)

ட, என்ன நீ? நான் இப்போ பொன்னு வீட்டு சொந்தமா மாப்பிள்ளை வீட்டு சொந்தமானு யோசிச்சிட்டு இருக்கேன். நீ இன்னும் பழைய கதைய பேசிட்டு இருக்க?”

“அக்கா…” சினுங்கினாள் வாசுகி.

“சரி. ஜோக்ஸ் அபார்ட். நீ எப்பவும் தெளிவா இருக்கற பொண்ணு. எதுக்கு கொழப்பிட்டு இருக்க? உங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளைனு வெச்சுக்கோ. கொஞ்ச நாள் பேசி பழகு. உன்னோட சம்மதம் இல்லாம எதும் நடக்காது. அவனும் உன்ன பொறுமையா தான முடிவு பன்ன சொன்னான். அவனுக்கு கால் பன்னி பேசு வாசு.”

“நான் ஜெயந்த்த எப்படி ஃபேஸ் பன்னுவேன்?”

“இதுக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்ல. கண்டதையும் போட்டு கொழப்பிட்டு இருக்காத.”

“ம்ம்ம். சரி அக்கா.”

அன்று இரவு யோசனை செய்தவாறே உறங்கிப் போனாள்.

முகுந்தன் தன் வாழ்க்கையில் வாசுகி ஒருத்தி ஆகி விட்ட கதையை சுகௌரியிடம் கூறினான்.

கீர்த்தனா விளையாட்டாக ஜெயந்த்தை கல்யாணம் செய்துக்கோ என்று சொல்ல எதுவுமே யோசிக்காமல் சரி என்று வாசுகி கூறியது…

சில காலம் கழித்து வாசுகியே கீர்த்தனாவிடம் ஜெயந்த்தை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது…

திருமண எண்ணம் இருந்த போதும் ஜெயந்த்திடம் தோழி போலவே பேசி பழகியது…

ஒரு நாள் ஜெயந்த்திடம் இது பற்றி கூறிய போது அவன் மறுத்தது…

இது காதலே அல்ல என்று சமாதானப்படுத்தியது மட்டும் இல்லாமல் இருவரும் இன்று வரை நண்பர்களாவே இருப்பது…

இவர்கள் நண்பர்களாய் இருக்க முகுந்தன் காதல் எண்ணம் வளர்ந்தது..

அவளது விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்டது…

என தன் கதையை கூறி முடித்தான்.

“அப்போ ஊருக்கு போனதும் ஜெயந்த்தனுக்கு செம்ம ட்ரீட் தான். எனக்கு எப்போ டா? எனிவேஸ், மெனி கங்ராஜுலேஷன்ஸ். எனக்கும் ஒரு புது ப்ரெண்ட் கெடச்சுட்டா.”

று மாதங்களுக்கு பிறகு

முகுந்தன் சென்னையில், வாசுகி பெங்களூரில்.

‘காதலை யாரடி முதலில் சொல்வது?’ பாடலுக்கு ஏற்ற சூழ்நிலை பல நாட்கள் நிலவியது. முகுந்தனின் பொறுமையே வென்றது. வாசுகியே காதலைக் கூறினாள். மூன்று மாதங்களாக முகுந்தனும் வாசுகியும் காதலர்கள். இன்னும் மூன்று மாதத்தில் திருமணம்.

“ஹலோ முகுந்த்”

“ஹேய் சுகி, அம்மா உனக்கு ஒரு பட்டு சேலை எடுக்கனும்னு சொன்னாங்க. என்ன கலர் வேனும்.”

“அதுக்கு தான் கால் பன்னினயா முகுந்த்?”

“அதுக்கும் தான்…”

பல நேரம் பேசிக்கொண்டிருக்க, அவனின் அம்மா ஒரு புடவையை வாங்கி வந்தார்.

“நாளைக்கு கல்யாணம்ன்னா அப்பவும் இப்படி தான் பேசிட்டு இருப்பியா? வாடா கெளம்பலாம்.”

நடுவில் என்ன மாற்றம் நடந்ததுனு யோசிக்கறீங்களா?

அனிதா, கீர்த்தனா, வாசுகியின் பெற்றோர் என யார் பேசியும், ஏன் ஜெயந்த்தே பேசியும் சமாதானம் ஆகாத வாசுகியை முகுந்தனே பேசி சம்மதம் வாங்கினான். சுகௌரியின் உதவியும், அடிக்கடி பெங்களூரு சென்றதுமே அவனுக்கு பலமாக அமைந்தது.

This is entry #69 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.