நீ மட்டும் தான்..!! - ப்ரியா
This is entry #72 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுதும் அவள் நினைவுகளே... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.. பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்..
இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருந்தவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்...
ச்சேச்சே.. அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது..
அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.. அது அவளே தான்...!
அவளாக இருக்கவே முடியாது. அடிக்கும் வெயிலின் தாகம் ஒரு புறம் உள்மனதில் எரியும் தீயின் தகிப்பு மறுபுறம். சற்று முன்னே நகர்ந்து இன்னும் நன்றாக பார்த்தான். அவள் தான்!! மதனின் மனம் சுக்கு நூறானது.
சிக்னலில் நின்றிருந்த வண்டிகள் சீறி பாய, அவள் அமர்ந்திருந்த பைக்கும் பறந்தது. அதை ஒட்டியவன் காட்டிய வேகத்தில் இவள் இன்னும் கொஞ்சம் அவனுடன் ஒட்டிகொண்டாள்.
அதை பார்த்தவனின் கண்கள் சிவக்க அவர்களை பின் தொடர்ந்தான். முதலில் "ஐவி பில்டர்ஸ்" என்ற எழுத்துக்கள் வடிவில் செதுக்கப்பட்ட பெரிய கற்கள் அலங்கரித்த அந்த அலுவலகத்தில் நுளின்தது அந்த வண்டி.
இது அவன் தொழில் ரீதியாக நட்புறவு வைத்துள்ள அலுவலகம் ஆயிற்றே,
'இங்கே இவளுக்கு என்ன வேலை?' யோசித்தவாறே உள்ளே நுழைந்தான் மதன்.
அவர்கள் பைக்கில் வந்ததை அனைவரும் ஒரு அதிசியத்தை பார்ப்பது போல பார்த்தது மட்டும் அல்லாமல், அவர்கள் உள்ளே நடக்க காவலாளி முதல் அவர்களின் எதிர்பட்ட அனைவரும் வணக்கம் வைத்தது இன்னும் குழப்பத்தை உண்டு பண்ணியது மதனிற்கு. உள்ளே சென்று பார்க்கலாமா என்ற மனதை திசை திருப்பி முதலில் வீட்டுக்கு சென்று அம்மாவிடம் சொல்ல வேண்டும் என வீட்டிற்கு விரைந்தான்.
அவன் வீட்டினுள் நுழைந்ததும் அவனை கண்டு பதறி
"என்னப்பா இப்போ தான போன? என்ன ஆச்சு?" என்று வினவிய தாத்தாவை முறைத்து விட்டு மாடிக்கு சென்று அம்மாவின் அறையில் புகுந்து கதவை அறைந்து சாத்தினான்.
இது எதிர் பார்த்தது தான் என்றாலும் மனம் உடைந்த தாத்தா, என்ன செய்வது என்று புரியாமல் அவர்களின் அலுவலுகத்திற்கு போன் செய்தார்.
"என்ன சொல்ற மதன்?"
"டேய் நீ நல்லா பார்த்தியா?"
"அண்ணா நிஜமாவே அது அண்ணி தானா?"
மதன் சொன்ன செய்தியை கேட்டு அவனின் அம்மா அப்பா தங்கை மூவரும் அதிர்ச்சியுடன் கேள்விகள் கேட்க,
"ஆமா ஆமா அவளே தான் நான் சரியாய் பாக்கலையோ அது அவ இல்லையோன்னு அவ்வளவு நம்பினேன் மா"
"மதன்.. பேசி பாக்கலாம்ப்பா"
"என்னம்மா பேச சொல்றிங்க?"
"மதன் பொறுமையா இரு", அவனின் அப்பா.
"இல்லை என்னால முடியாது"
"முடியாதுன்னா என்ன அர்த்தம் அண்ணா? கடத்திட்டா வர முடியும்" என்று அவன் தங்கை அங்கலாய்க்க,
"என்ன என்ன சொன்ன? கடத்திட்டு, எஸ் அதை தான் செய்ய போறேன், ஊரறிய தாலி கட்டினா என்ன? எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச என்ன? அவ தான் என் மனைவி இதை யாராலையும் மாத்த முடியாது, நாளைக்கே எங்க கல்யாணம்"
"மதன் அவசர படாத" என்ற தாயின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கோபத்துடன் வெளியேறினான் மதன். அவன் தாத்தாவை அழைத்தவன் கோபத்துடனே பேசினான், உங்களுக்கு தான் கடத்தல் கொலை எல்லாம் செய்ற ஆட்கள் நிறைய தெரியுமே அதுல யாராவது பேசி அனுப்பி இந்த போட்டோ ல இருக்க பொண்ண தூக்கிட்டு வர சொல்லுங்க.
"மதன் என்னப்பா சொல்ற?" அவன் தாத்தா பதற,
"சும்மா நடிக்காதிங்க உங்களால முடியுமா முடியாதா?"
".... "
"சரி நான் வேற ஆள வெச்சு பாத்துக்கறேன்"
"இல்லப்பா வேண்டாம் நானே பண்ண சொல்றேன்"
"எப்போ?"
"உனக்கு எப்போ முடிக்கணும்?"
"சாயங்காலம் அவ இங்க இருக்கணும்"
"இருப்பா"