(Reading time: 9 - 17 minutes)

னவு கலைய ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் “உங்களுக்கு புரியாது. ஆணென்றோ, பெண்ணென்றோ அல்லாமல் சகமனிதராய் நடத்தப்படுவது என்ன என்று.... என்னை மாதிரி உள்ள திருநங்கைகளை பார்த்தா ஆண்கள் ஒண்ணு தவறான எண்ணத்தோடு நெருங்குவர், இல்லையேல் து(கு)ஷ்டரை கண்டது போல் விலகி ஓடுவர். பெண்களோ என்னை பெண் என்று ஏற்க முடியாமலும், ஆண் என்று நினைக்க முடியாமலும், ஆணாயிருந்தேன் என்பதை மறக்க முடியாமலும் குழம்பி விலகுவர். ஆகமொத்தம் பொதுவாகவே நாங்கள் அருகில் சென்றால் எல்லோரும் விலகி செல்வர், தீண்டத்தகாதவர் போல் எங்களை பாவித்து... அப்படியிருக்க இடித்தது நான் என்று தெரிந்தும் விலகி செல்லவோ, நெருங்கவோ முனையாமல் அதற்கு முன்னால் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அந்த ஒரு நிமிடம்........ முதன்முதலாய் சகமனிதராய் மதிக்கப்பட்டேன். உங்கள் எல்லோரையும் தவிர்த்து என்னை ஒரு மனித பிறவியாய் பார்த்த அவர் எனக்கு ஸ்பெஷல் தான். அவரோடு கனவில் நான் வாழ்வதே எனக்கு போதும்” என்று தன் மன உணர்வுகளை சொல்லி முடித்தாள்.

இதுவரை அவள் கூறியதை கேட்டு அதிசயித்து அமர்ந்திருந்தவர்கள்...........

“இதுவரை தங்கள் வீட்டினரிடம் இவளை பற்றி இரக்கத்தோடு கூறியது போல் அல்லாமல், அவளின் அன்பு,தெளிந்த சிந்தனை பற்றி எல்லாம் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அவளை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஆக்கவேண்டும்” என்ற உறுதி பூண்டனர்.

“அவளுக்கு சொந்தம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் பந்தத்தை உருவாக்குவது நமது கடமை. அது ஒரே நாளில் நடக்காது. ஆனால் அது நடக்கும் வரை ஓயமாட்டோம்” என்று வைராக்கியம் கொண்டனர் அவள் சகோதரதோழிகள்.                        

வளை போன்ற திருநங்கைகளுக்கு

முதல் காதலே

ஒரே காதலாய்....

கனவு காதலாய்....

காவிய காதலாய்....

காலம் முழுதும் தொடரும் காதலாய்....

காத்திருக்கும் காதலாய்...

அவர்களின் காதல் தான் கை கூட முடியாது...கனவுகளாவது கை கூடட்டும்.

இனியேனும் அவளுக்கு அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, மருமகன், மருமகள்கள் கிடைக்க பிரார்த்திப்போம்.

தீண்டல் தொடரும்.

This is entry #73 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.