(Reading time: 24 - 47 minutes)

ஷெஷாங்,,” இவள் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவன்…

“விழிச்சுட்டியா தனு….” என்றபடி எழும்ப அவன் எப்போதோ அவளை சின்னு எனக் கூப்பிட்டானோ என்றும் தோன்றுகிறது….. முன்னால அம்மா அப்பா வார்த்தைக்கு வார்த்தை அப்டித்தான் இவள கூப்டுவாங்க….தலைல வச்சு கூத்தாடுவாங்க…..

நியாபகம் வர கண்ணில் அதுவாக நீர் கட்ட….

“என்னாச்சு தனு…? ரொம்ப முடியலையாமா…?” சற்று பதறியபடி இப்போது இவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவன் மார்பை மட்டுமே ஆதாரமாக கொண்டு தன்னை மீறி அப்படியே சாய்ந்துவிட்டாள் இவள்..

“சின்னு…” தாங்கி அணைத்திருந்தான் அவன்….

விலக துடிக்கிறது குற்ற இதயம்….. மறுக்கிறது அன்புக்காக ஏங்கும் மனது….

சற்று நேரம் அவன் பிடிக்குள் அவள் அப்படியே அடங்கி இருந்தவள்…… “நான் உங்களுக்கு தகுதியானவ இல்லபா….நான்  மோசம் ….ரொம்பவும் மோசம்… ஐ’ம் வீக்….வெரி வீக்…… ” என கதற தொடங்கி இருந்தாள்.

சற்று நேரம் அவளை எந்த வகையிலும் தடுக்கவில்லை அவனும்….

பின் ஒருவாறு இவள் சுதாரிக்கவும்….உன்ட்ட கொஞ்சம் பேசனும் என அழைத்துப் போய் பெட்டில் உட்கார வைத்தவன்…

“உனக்கு தெரியுமா….. உலகத்தை காக்க கடவுளின் குமாரன் ஜீசஸ் பிறந்திருக்கார்னு ஆட்டு இடையர்களுக்கு தேவதூதர்கள் அறிவிச்சதா பைபிள்ள இருக்கும் படிச்சிறுக்கியா…? அவர நீங்க எப்டி அடையாளம் கண்டுகலாம்னா…ஒரு பிறந்த குழந்தையா…மாட்டு தொழுவத்தில்..பழைய துணியால சுத்தி வைக்கப்பட்றுபாருன்னு சொல்லி இருப்பாங்க…..

அதாவது எந்த ஒரு மனிதனும் கடவுளைப் பத்தி முதன் முதலா யோசிக்க தொடங்குறப்ப….…..அவர் பலவீனமானவரா….. தனக்கு தானே கூட எதையும் செய்துக்க முடியாதவரா….. எந்த தப்பையும் தடுத்து நிறுத்த முடியாத குழந்தையா…தேவை உள்ளவங்களுக்கு கூட எதையும் கொடுக்க முடியாத ஏழையாதான் தெரிவார்… “

அவனை வினோதமாய் பார்த்தாள் அவள்….

“அதுக்குபிறகும் ஏன் எதுக்கு என  அவரை இன்னுமா தேடுறவ ஒவ்வொருவருக்கும்தான் அவர் எப்பேர்பட்ட கிங்னு புரியும்……அதாவது அடுத்தும் ஜீசஸ் வளர்ந்தார்…..

ஒரு அடிமை நாட்ல ஒன்னுமே இல்லாத வீட்டில….டெலிவரி பார்க்க கூட அவரோட அம்மாக்கு ஆள் இல்லாத சூழ் நிலையில பிறந்த அவர்… அதுவும் அவர் பிறந்து 2000 வருஷம் தாண்டின பிறகும் இன்னும் நீயும் நானும் கோடானு கோடி பேறும் அவர்ட்ட இருந்து நாம வாழ தேவையான அளவு உதவிகளை பெற்று, நமக்கு அவர் எல்லாவகையிலும் போதுமானவரா இருக்கார்னு அனுபவிச்சு, அவரை கடவுளா உணர்ந்து அவரைப் போல வாழனும்னு பின்பற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்…..

ஒவ்வொரு தலைமுறையிலும் அவருக்குன்னு கோடிக் கணக்கான கூட்டம் இருந்திருக்குது…. இருக்குது….அப்படி ஒரு ஆளுகை அவரோடது…....

அப்படித்தான் தன்ஷி நம்ம வீக்னெஸும்….அது  நமக்கே நமக்கான ஒரு டொமைன்…..ஒரு  சிம்மாசனத்தின் ஆரம்பம்…..அதில் கடவுள அனுமதிச்சா….. அதை ஒழுங்கா ஹேண்டில் செய்தோம்னா…. நம்ம வீக்னசை தாண்டி  வருவோம்….  வளருவோம்….அதாலயே நாலு பேருக்கு நல்லது நடக்கும்…..நமக்குன்னு ஒரு ராஜியமே கூட உண்டாகும்….

ஆனா அப்ப போய் நான் ஒரு நாள் குழந்தையா இருந்தேன்…..எனக்கு கேவலமா இருக்குன்னு அழுதா அபத்தமா இருக்கும்…..  .

நீ ட்ரக் அடிக்ட்டா இருந்த கதையும் அப்டித்தான்…அது உன் ஆரம்பம் ….இப்ப அதவிட்டு வெளிய வந்தாச்சு….உன் பேரண்ட்ஸ் உன் பாஸ்ட்ட பார்த்து பயந்துட்டாங்க…….எவ்ளவு வளந்தாலும்  பேரண்ஸுக்கு குழந்தைகளாத்தான் நாம தெரிவோம்… அதான் அப்டி உன்னை நம்பாம, வீட்டை விட்டு வெளிய கூட விடாம, கைல பணம் குடுத்தா பழையபடி எதுவும் ஆகிடுமோன்னு  பயந்துட்டாங்க….…”

அவன் பேசுவதைக் கேட்டவள்…..இரு கைகளாலும் முகத்தை தாங்கியபடி  வெகு நேரம் அமர்ந்திருந்தாள்….

அவனும் எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தவன்… கடைசியில்…..

“ஒரு ஹஸ்பண்ட் தன் வைஃபை அப்படி குழந்தையா பார்க்க முடியதே…” என்று எழுந்து போக….சட்டென கை நீட்டி அவன் கையைப் பிடித்தாள் இவள்….

இவளைக் கண்ணோடு கண் பார்த்தவன்…. முகத்தில் மென்மை தவழ “எனக்கு உன் ப்ரெசென்ட்டும் ஃப்யூசரும்தான் வேணும் சின்னு….” என்று முடித்தான். அந்த நொடியே அவனிடம் அவள் சரணடைந்துவிட்டாள் என்று இல்லை….

ஆனால் முசோரியிலிருந்து திரும்பி வரும் போது அவனது திருமதியாகத்தான் வந்திருந்தாள் தன்ஷியா….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.