(Reading time: 10 - 20 minutes)

2017 போட்டி சிறுகதை 94 - உன்னோடு பின்னோடும் நெஞ்சம் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

This is entry #94 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்தக் கதை - காதல்

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

 

மார்போடு அனைத்த புத்தகங்களோடு கல்லூரி நூலக வாசலில் வெகுநெரம் நின்று கொண்டிருந்தாள் வருணா. தன்னைக் கடந்து சென்ற தன் கல்லூரி தோழர்களில் சிலர், அவளைக் கடந்து சென்று தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்தனர். வருணாவை வெட்கம் பிடுங்கி தின்றது, ஆயினும் நூலகத்தை விட்டு அகலாது காத்திருந்தாள் ஏனெனில், அவள் உள்ளம் முழுதும் பொங்கும் காதலுக்கு சொந்தமான ‘சர்வேஷ்’ அவளை நூலகத்தில் சந்திப்பதாக கூறியிருந்தான். மூன்று வருடங்கள் மனதிற்குள் கட்டிக்காத்த காதல், இருவருக்கும் தமிழார்வம் அதிகம், கவிதைகளில் தொடங்கி காதலில் வந்து நின்றது. கல்லூரி முடிய இன்னும் சில வாரங்களே உள்ளது என்னும் நிலையில் மின்னஞ்சலில் தன் மனதை திறந்து வைத்தாள்.  இறுதியாண்டு தேர்வுகள் நெருங்க அவனைப்பார்பதற்கு அன்றே கடைசிநாள் இனி இதுபோல் அவன் அருகாமையை உணர்ந்து சிலிப்பதற்கு வழியில்லை என்ற எண்ணம் வெமேலிடும்போது அவள் மென்மையான பெண்மை வலித்தது.

சர்வேஷ் வரவில்லை, என்னக் காரணமாகயிருக்கும்? அவள் யோசிக்கும்போதே “வருணா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். அவளையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டு ‘பகத்’ நின்றிருந்தான். அவளது முகத்தில் அப்பட்டமாக தெரிந்த ஏமாற்றத்தை அவன் உணார்ந்து கொண்டன்.

“இங்க என்ன வருணா பன்றீங்க?” குரலை உயர்த்தி அவன் கேட்ட தினிசில் அவள் மிரண்டுபோனாள்.

“இல்ல அது வந்து கொஞ்சம் புக்ஸ் எடுக்கனும் லைப்ரேரி கார்டு ஃபிரண்டு ஹாஸ்டல்ல இருந்து எடுக்க போயிருக்காங்க, அதான் வெயிட் பன்றேன்” என்று அவள் தட்டுதடுமாறி கூற,

“ஓ, ரொம்ப நேரமா, வெயிட் பன்றீங்க போல, இப்பவே 6:30 ஆச்சு, ஹாஸ்ட்டலுக்கு கிளம்புங்க நாளைக்கு உங்க ஃப்ரண்டோட வந்து புக்ஸ் எடுங்க” அவன் அளுத்தமாக கூற,

வருணா நிமிர்ந்து அவன் முகத்தைப்பார்த்தாள், ‘இன்னும் என்ன?’ என்பதுபோலிருந்தது அவன் பார்வை. அதற்கு மேல் அங்குநிற்காது படிகளில் இறங்கி வெளியே வந்தாள், அங்கே பகத்தின் நெருங்கிய நண்பன், கார்த்திக் நின்று கொண்டிருந்தான் வருணாவுக்கு பெரும் ஏமாற்றமாகயிருந்தது. விறுவிறுவென விடுதியை நோக்கி நடந்தாள். பகத், வருணா செல்வதையே கவனித்துக்கொண்டு மெதுவாக படிகளில் இறங்கிவந்தான்.

அவனுடன் இணைந்து அவன் தோள்களில் தன் கையைப்போட்டுக்கொண்ட கார்த்திக், “மச்சான், உனக்கு ஏண்டா இந்த வேண்டாதவேலை? அவ யாருக்காக இங்க நின்னா உனக்கென்ன? காதல் விவகாரத்தில் நாம தலையிடக்கூடாதுடா!” , என்றான்.

“எதுடா காதல்? வருணா ஒரு அப்பாவி பெண். அவளோடு கவிதை கிவிதைன்னு கண்டதை உளறி அவ மனசைக்கெடுத்து வச்சிருக்கிறான் சர்வேஷ். இவளை இங்க நிக்க வச்சிட்டு காலேஜ் ஹாஸ்டல் ஃபுல்லா, வருணா என்ன லவ் பன்றா மீட் பன்னனும்னு ஒரே டார்ச்சர்ன்னு சொல்லியிருக்கான், அதுக்கு நம்ம பசங்க  “போடா யார்க்கிட்ட கதை விடுர, அவயாரையும் நிமிர்ந்து கூட பாக்கமாட்டான்னு” சொன்னதற்கு, “வேனும்னா லைப்ரேரி போய் பாருங்கட, அவ இப்ப எனக்காக அங்க காத்திட்டு இருப்பான்னு சொல்லியிருக்கிறான்”.

“அதாண்டா எனக்கு மனசு கேட்கலை, இவளை இங்கிருந்து கிளப்பாட்டி, யாரச்சும் இவளைப்பார்த்த சர்வேஷ் விடுற கதையெல்லாம் நிசம் ஆயிடாதா?” சலிப்போடு சொன்னான் பகத்.

“சர்வேஷ் சொல்றது உண்மைதானே? மெபீ, சர்வேஷ் குணம் அவளுக்கு தெரியாத இருக்கலாம், நீ எதுக்கு இதுல் தலையிடுற? அவன் குணம் தெரிஞ்சா அந்த பெண்ணேவிலகி போயிடும். நமக்கு பாக்கிறதுக்கு வேற வேலையால்லை?”

“இதே கேள்வியை அவனும் தன் மனதுக்கு கேட்டுக்கொண்டான். “வருணா” அவன் நினைக்கும்போதே அவள் மலர்முகம் மனதிற்குள் பூஞ்சாரலாய் வந்து போனது. “எல்லாம் ஒரு ஹெல்ப் தானேடா! எனக்கும் ஒரு தங்கையிருக்கா, அவளை யாராச்சும் ஏமாத்தினா நீ பார்த்திட்டு சும்மா இருப்பியா?”

“அதானேப் பார்த்தேன் எங்க நீதான் அவளை உன் தங்கைன்னு சொல்றீயோன்னு ஆச்சர்யப்பட்டேன்”

கார்த்திக்கின் காலரை இழுத்துப் பிடித்துக்கொண்டே, வாடா வாடா ரொம்ப கேள்விகேட்காதடா”  என்று சிரித்தவாரே அவர்கள் விடுதியை நோக்கி நடந்து சென்றனர்.

ல்லூரி தேர்வுகள் முடிந்து கிளம்பும் கடைசி நாள், கேன்டீனில் சர்வேஷ் எதிரே அமர்ந்துருந்தாள் வருணா. சர்வேஷ் அவள் எதிரே ஒருவித சலிப்புடன் அமர்ந்திருந்தான்.  “சாரி வருணா!, நீ தான் நம்ம ஃப்ரண்ட்ஷிப்ப தப்பா புரிஞ்சுக்கிட்ட, எனக்கு உன் மேல எந்த ஈடுபாடுமில்ல, ஜஸ்ட் ஃப்ரண்டா தான்  நான் உன்னை நினைக்கிறேன். இந்த சென்டிமென்ட்லாம் இல்லாம ஹெப்பியா பிரியலாமே, ஆல் தெ பெஸ்ட்” என்று அவன் நீட்டிய கைகளைப்பற்றாது வேதனையுடன் அவன் முகத்தைப் பார்த்தாள் அவள்.

“பை, நான் கிளம்புறேன்”  என்று கூறிவிட்டு அவள் பதிலுக்கு கூட நிற்காது ஓடி மறைந்தான் சர்வேஷ். காதல் மென்மையான அவள் உள்ளத்தை சுக்கலாக கிழித்தது. தோற்றுப்போன ஒரு காதலின் இறுதியில் மனம் தளர்ந்து அமர்ந்திருந்தவளிடம் இரண்டு காபி கப்புகளுடன் அவள் எதிரே வந்து அமர்ந்தான் பகத்.

அவனைப்பார்த்ததும் கண்களைத் துடைத்துக்கொண்டவள், சரிந்திருந்த அவள் துப்பட்டாவை சரி செய்தாள், அவள் நேர்த்தியானக் குணத்தையும் அழகையும் உள்ளூர இரசித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.