எனங்க குழப்புரீங்க என்ன பிடிக்கலை னு சொல்ல சொல்லிவிட்டு நீங்க பிடிச்சிருக்குனு சொல்லுவனு சொல்றீங்க.உங்களுக்கு என்ன பிடிக்கள தான அப்றம் நீங்களே பிடிக்க வில்லைனு சொல்லிலிர வேண்டி தான. அப்பா அம்மாஇட்ட சொல்ல பயமா
அதுலாம் இல்லை பிடிக்காலண தான பிடிக்கலைனு சொல்லணும்
புரியல.
எனக்கு உங்கள கல்யாணம் பண்ண சம்மதம் தான். ஆனா நான் உங்களுக்கு வேணாம்.
என்னால் உங்க கிட்ட இப்ப ஏதும் சொல்ல முடியாது. ஆனா நான் உங்களுக்கு வேணாம். வேற நல்ல பொண்ணா பாத்துக்கொங்க. என்னோட வாழ்க்கைல வலி ரொம்ப அதிகம். இப்ப வரைக்கு எனக்கு கஸ்டம் தொடருது. என்ன கட்டிக்கிட்டா அது உங்களை உம் துரத்தும்.
அது மட்டும் இலாம நா ஒரு பையன லவ் பண்ணேன் பட் அவன் என் மனசுல இல்ல. ஆனாலும் அது தப்பு தான சோ நா வேணாம்.
வேற மாப்பிளை உங்கள பக்க வந்தா என்ன செய்வீங்க
அவங்க கிட்டயூம் சொல்ல தான் செய்வேன். அவங்கள வேணாம்னு சொல்லிறுவாங்க . கொஞ்ச நாள் கழிச்சு யாரும் பாக்க வர மாட்டாங்க அதான்
இப்ப நான் கீழ போய் உங்கள புடிச்சிருக்குனு சொன்னா
சொலிக்கொங்க. அப்றம் உங்க தலை எழுத்து. நா தினமும் எதுக்காவது அழுவேன்.அப்றம் நீங்களும் அழுவீங்க.
எநோ அவள பாத்து சிரிப்பு தான் வந்தது.
அடுத்து எல்லாம் வேகமாய் நடந்தது.கீழெ போய் புடிச்சிருக்கு என்றான் அவன். அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு ஆறுதல் பாவம் தான் வந்தது சிரிப்பு இல்லை சந்தோசம் இல்லை.
அவளும் சம்மதம் என்றாள். அவர்கள் இருவரைஉம் ஒருதரின் கண்கள் கூர்ந்து நோக்கியத்தை யாரும் கவனிக்க வில்லை.
அடுத்து எல்லமே ஒழுங்கா நடை பெற்றது.ஆனால் இடை இல் பல நாள் அவளை பார்த்தான் ஆனால் அவனிடம் மட்டும் ஒதுங்கியே இருந்தாள்.
அவனாக பேசுநாலும் பதில் சொல்வதோட சரி அடுத்து அவளோ தான். அவளிடம் போன் பண்ணி பேச நினைத்தாலும் அவளிடம் மொபைல் இல்லை . வாங்கி தரவானு கேட்டதுக்கு கல்யாணத்துக்கு பிறகு என்று சொல்லி விட்டாள். அவள் அம்மா நாங்களும் கேட்டோம் வேணாம்னு சொல்லி விட்டாள் என்றார்கள்
என்ன தான் செய்றது இவளை. அவங்க அம்மா நம்பர்க்கு கூப்பிட்டா பேசவே மாட்டா.
இன்னைக்கு ஒரு முடிவொடு தான் கிளம்பி வந்தான்.என்ன பிரச்சனை என்று கேக்கணும்னு. ஒரு வாரத்துல கல்யாணத்த வச்சிட்டு மனசுல சந்தோசமும் பூரிப்பும் இல்லாம ஏதோ பொம்மை மாதிரி கல்யாணம் பண்றது அவனுக்கு விருப்பம் இல்லை.
ரெண்டு பேருக்கும் புடிக்கலனாளும் பரவா இல்லை ஆனா புடிச்சிருக்கே அதான் அவனுக்கு கவலை.
சற்று ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் இங்கு வந்தான் அதும் கொஞ்சம் பத்திரிகை குடுகுறததுக்கு. வந்த உடனே அத்தை மாமா வரவெற்பு நடந்தது ஆனா இந்த லூசு தான் ஆப்டீயே இருக்கு ஏதும் பேசலாம்ல என்று நினைத்து கொண்டான்.
அவனுக்கு காஃபி குடுக்கும் போது தான் கவனித்தான் அத்தை மாமா வெளிய கிலம்புரதை. என்ன வென்று விசாரிக்க அந்த ஊரில் பத்திரிகை குடுக்க போறதா சொன்னாங்க.அது மட்டும் இல்லாம கொஞ்ச நேரம் அபர்ணா கூட பேசிட்டு இருங்க அப்றம் நைட் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று சொன்னார்கள்
இத விட்ட வேற சந்தர்ப்பம் கிடைக்காதே . சாந்தோசமாணான். எல்லாரும் கட்டிக்க வேண்டிய பொண்ணை பாக்கத்துல வச்சிக்கிட்டு ரோமன்ஸெ பண்ண தனிமை தேடுவங்க.நான் சோக கதை கேக்க தனிமைய தெடுரேன்.என்ன நிலமை டா ரஞ்சன் உனக்கு.
அடுத்த ஒரு மணி நேரத்துல தான் அவள் இவனிடம் மனம் திறந்து பேசினாள் . இவனும் கீழெ போய் சொல்லி கொண்டு கிளம்பி விட்டான்.இப்போது அவளுக்கு பதில் சொல்ல முடியாது.அதனால் வீட்டுக்கு போய் ஒரு மெய்ல் அநுப்லாம்னு முடிவு செய்தான் .அப்போது தான் அவள் பேசியதை யோசித்து பார்த்தான்.
எப்ப ப்ளாஷ்பபக்க் சின்னதா இருக்கும்னு பார்த்தா ரொம்ப பெருசு.பாவம் தான் என் ஆளு. மாடிஇல் அமர்ந்த உடன் கேட்டான் இவன்
இங்க பாரு அபர்ணா உனக்கு என்ன தான் ப்ராப்லம்.ஏன் இப்டி இருக்க.காரணம் தெரிஞ்சலாவது சரி பண்ணலாம் .
பதில் இல்லை அவளிடத்தில்
சொல்லு அபர்ணா இதுக்கு மேல நாம கல்யாணம் முடிஞ்சா அப்றம் தான் பேச முடிஉம் . ஆனா நீ இப்டி இருக்குறதது கஸ்டமா இருக்கு.மிததவங்களுக்கு வேணும்னா அது தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு நல்லாவே தெரிஉது. சொல்லிருமா எல்லாத்தைும் அப்ப உன் மன பாரம் குறையாளம்
எனக்கு என் வீடெ புடிக்கல .எதுமே புடிக்கல யாருமே புடிக்கல . இன்னும் சொல்ல போனா வாழவே புடிக்கல . கல்யாணம் எனக்கு கொஞ்சம் மாற்றம் தான் ஆனா அதும் பயமா இருக்கு. நீங்களும் என்னால கஸ்ட படுத்துவீங்களோனு.