நடக்கலாம் அப்டி கூட. ஆனா நான் பாசமா பழக தான் முயற்சி செய்வேன் அவங்க விலகி போனாங்கனா கண்டிப்பா அவங்கள விட்டு நானும் விலகி தான் இருப்பேன் . அவங்க கூட சண்டை லாம் போட மாட்டேன் ஆனா அப்ப உம் நம்ம மேல பாசம் காட்ட யாருமே இல்லனு எனக்குள்ளே அழுவேன்
சரி உங்க அத்தை ய விடு என்ன உனக்கு புடிச்சிருக்கா நிஜமாவே. என்ன பத்தி னே யோசிக்க வே இல்லயா.
யோசிப்பென் தான் நிரயவே ஏன் நா நீங்க தான் என் கூடவே இருப்பீங்க
அதிகமா ஆசை உம் இருக்கு ஆனா எல்லாம் நிறை வேரமா போய்ட்டா அதனால ரொம்ப எதிர் பார்க்க பயமா இருக்கு . எனக்கு தேவை எல்லாரும் என் மேல பாசம் வைக்கணும் னு சுயநலம் தான் . வேற பணம் நகை சொத்து வேற ஏதும் எனக்கு வேணாம். எனக்கு உங்க பாசம் மட்டும் குடுங்க எனக்கு அது போதும் பா ப்லீஸ்.
இன்னும் பெரிய ஆசை என்னனா மனசு விட்டு ஆழனும் அதான் என்ன கூட்டிட்டு போய்ரீங்களா உங்க கூடவே . இதை சொல்லும் போது தான் அத்தை கூப்பிதாங்க போய் விட்டாள்.
சரியான பேபீ டீ நீ. நான் உன்ன நினைச்சு கனவு கண்டுட்டு இருக்கேன் ஆனா நீ மாமியார் மடில படுக்க ஆசை படுர
கவலை படாத கண்ணம்மா இனி உன்ன கஸ்டம் நெருங்கவே விட மாட்டேன். உன் குணம் உன் வீட்டில உள்ளவர்கள் புரிஞ்சுகல. ஆனா நான் புரிஞ்சுக்கிட்டேன்.
ஒரு வாரம் பொறுதுக்கோ உண்ண ஆப்டீயே அந்த ஜேல் ல இருந்து தூக்கிட்டு வந்தூரேன். என் கூடவே வச்சுபெண்.ஐ லவ் யூ பேபீ என்று மெய்ல் அனுப்பி விட்டு தான் கனவை தொடர்ந்தான்.
அடுத்த நாள் மெய்ல் ஓப்பன் செய்து பார்த்து விட்டு அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.அது திருமணம் வரைகுமே ஆப்டீயே இருந்தது. அவள் முகத்தில் புன்னகையை பார்த்து அவனுக்குமே சந்தோசம் தான். ஒரு வாரத்தில் திருமணம் முடிந்து பிறந்த வீட்டை விட்டு போகும் போது அவளுக்கு எந்த சோகம்மும் இல்லை. ஏதோ சொந்த இடத்துக்கு வந்து விட்டோம் என்ற நிம்மதி தான் உறவு கார பெண்கள் கூட கிண்டல் செய்தனர் மாப்பிளை வீட்டுக்கு போக இத்தனை சந்தோசமா என்று.
6 மணிக்கு அவளை அங்கு விட்டுவிட்டு அவள் உறவினர்கள் சென்ற பின் ரஞ்சன் வீட்டினார் மட்டும் இருந்தனர். அந்த வீட்டில் அவளுக்கு பழக்கம் இல்லாதததால் அமைதியாக இருந்தாள்.
அப்போது அவள் மாமனார் அவள் அருகில் வந்தார் மாரியதைஇ காக எழுந்து நின்றாள். உக்காரு மா. இதுஉன் வீடு. என்ன உன் அப்பா மாதிரி நினச்சிக்கோ சரியா
சரி மாமா
அப்றம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மா
சொல்லுங்க மாமா
என் பையனை உனக்கு புடிச்சிருக்கா மா
ஹ்ம் புடிச்சிருக்கு மாமா
இல்ல மா பொண்ணு பாக்க வந்த நேரம் உன் முகத்துல ஒரு மலர்ச்சி இல்ல. புடிச்சிருக்குனு சொன்ன ஆனா அதுல சந்தோசம் இல்ல. ஆனா அவன் புடிச்சிருக்குனு சொல்லும் போது உன் முகத்துல ஒரு நிமதி வந்துச்சு ஏன் அப்பாவா நினைச்சா சொல்லு மா
அவன் என் பையன் தான் ஆனாலும் ரொம்ப நல்லவன் நாங்க எப்போதும் அதிகமா பேசிக மாட்டோம் அவன் அம்மா பின்னாடியே தான் போவான் அதிக நேரம் எனக்கு பொறாமையா கூட இருக்கும். ஆனா அவன் கூட க்ளோசெ பேச ஏதோ ஒண்ணு தடுக்கும்.
அதனால அவன் கிட்ட கேக்க முடில அதான் உன்கிட்ட கேக்குறேன்.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா. எனக்கு உங்க பையனை ரொம்ப புடிச்சிருக்கு அதை விட அத்தை உங்கள அண்ணி அன்ன குட்டிஷ ஏழரைும் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க தேவ இல்லாம வருத்த படாதீங்க
என்னால யாருக்கும் எந்த மன வேதனை உம் வராதது.
அது மட்டும் இல்ல மருமக ளே நீ உம் சந்தோசமா இருக்கணும் .அங்க பாரு உன் கூட நான் உக்காந்து பேசுறானாம் உன் புருசன் பாக்குரான் பொறாமை பாரு அவன் கண்ணுல.
இருக்கலாம் மாமா ஆனா அது கூட அப்பா தன்னிடம் இப்டி சிரிச்சு பேசவே இல்லனு ஏக்க்ம் தான் இருக்கும் போல.
அதே நேரம் அவனும் அவன் அம்மா விடம் இவளை பற்றி தான் பேசி கொண்டிருந்தான்
அம்மா இங்க வாயேன்
என்ன டா
உனக்கு உன் மருமகளை புடிச்சிருக்கா
ஹ்ம் புடிச்சிருக்கே ஆனா அத எதுக்கு என்கிட்ட கேக்க உன்கிட்ட தான கேக்கணும்
உனக்கு ஒண்ணு உண்மைய சொல்லவா அவளுக்கு என்ன விட உண்ண தான் ரொம்ப பிடிச்சிருக்காம்
என்ன டா சொல்ற