(Reading time: 24 - 48 minutes)

ரவு மெதுவாக கரைந்துகொண்டிருந்தது, இளமையில் அதிக இன்பத்தையும் துன்பத்தையும் ஒருங்கே தரவல்லது இந்த காதல், இன்பத்தைவிட துன்பமே அதிகம், ஒவ்வொரு திசையில் ஒவ்வொரு முகத்தைக்காட்டி மனதைக் கொல்லும் வலிமையுடையது காதல். படுக்கையில் எவ்வளவு முறை புரண்டாலும் தர்ஷினிக்கு விஷ்ணுவின் மலர்முகமும், சிவாவின் எண்ணங்களும் தான் வந்து போனது. பலமுறை இவள் அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை, கடந்த ஒரு மாதமாக விஷ்ணு இரவில் இவளை அனைத்துதான் உறங்கிக்கொண்டிருந்தாள், அந்த நெருக்கமும் அனைப்பும் இன்றி தர்ஷினிக்கு உறக்கம் பிடிக்கவில்லை, ஏதாவது முக்கியமான வழக்கு மறுநாள் வழக்காடவிருந்தால் சிவா அழைப்பை ஏற்கமாட்டான், அது தெரிந்த விசயம் தான், ஆனால் மாணிக்கத்தின் அக்னி வார்த்தைகளுக்கு பிறகு, அவளுக்கு எல்லாமும் சந்தேகத்தை தந்தது.

மெதுவாக எழுந்து, அறையைத் தாண்டி, மாணிக்கம் உறங்கும் இடத்தை மெதுவாக பூணையின் அடியாக கடந்து அடுக்களை அருகே சென்றாள், தாகமற்ற நேரத்திலும் பேருக்கு இரண்டு டம்ப்ளர் தண்ணீரை பருகி, சன்னலின் வழியே சலனமற்று இருந்த தோட்டத்து வாயிலைப்பார்த்தாள். மெதுவாக பின் கதவைத் திறந்து தோட்டத்தினுள் நடந்தாள். அவளது எண்ணம் பொய்க்கவில்லை, சிவா அவன் வீட்டு மொட்டைமாடியில் நின்று நிலவை இரசித்துக்கொண்டிருந்தான், இவள் தன் வீட்டு தோட்டத்தின் வழி அவன் வீட்டு பின் புறம் நுழைந்து படிக்கட்டுகளில் ஏறினாள், மெதுவே அவன் பின் புறம் சென்று எம்பி அவன் விழிகளை மூட நினைத்து கால்களை எம்பி, கைகளை உயர்த்த, அவன் திரும்பாது, அதிராது இவளை தன் முன்னால் இழுத்து அனைத்தான். ஒரு நொடி அதிர்ந்து திமிரியவள், அவனிடமிருந்து இறுதியில் விலக முடியாது அவனது மார்பில் புதைந்தாள்.

“டீச்சரம்மா செய்யுற காரியமா இது?” அவனது குறும்பு வார்த்தைகளை காதில் வாங்கியவள், மெதுவாக அவனது நெஞ்சில் குத்தினாள்.

“வக்கிலய்யா மட்டும் இப்படி கட்டிபிடிச்சுட்டு நிக்கலாம், டீச்சரம்மா ரொமான்ஸ் பன்னக்கூடாதா?

அவளை விலக்கி முகத்தைப் பார்த்தான். களங்கம் எள் அளவும் கற்பிக்க முடியாத களையான முகம், ஒரு கற்றை முடி முகத்தில் விழுந்து கன்னத்தில் புரண்டது, மெதுவாக அதை விலக்கியவன் அவளது முகத்தின் அருகே குனிந்தான். எதிர்காது அவன் தந்தவற்றை ஏற்றுக்கொண்டாள் பெண். வாடைக்காற்றும் அந்த இரவில் அவன் வாசமும் சேர்ந்து உடலை நடுங்க செய்ய, இன்னுமாய் அவளை அனைத்துக்கொண்டான்.

செய்வது தவறுதான்,  இருவருக்கும் புரிந்தது. ஒருவரை ஒருவர் விட்டு விலகி இருக்கும் சக்தியற்று போயிற்று. வெகுநேரம் அவன் தோள் சாய்ந்திருந்தாள், “தர்ஷூ, கீழ போய் தூங்கு!”

“ம்ஹூம்!”

“ஏனாம்!”

“நீங்க இங்க தனியா இருந்து என்ன யோசிச்சுட்டு இருந்தீங்க?”

“நாளைக்கு கேச பத்தி!”

“பொய்!”

அவளை ஆளமாய் பார்த்தான், மனதிரண்டும் சங்கமித்த பிறகு வாய்வார்த்தை எதற்கு என்பதுபோல் பார்த்தாள், கண்கள் விரித்து ஒவ்வொருமுறை இவள் அவனை பார்க்கும்போது, இவனுள் ஏதோ ஓன்று கரைபுரள்வது போல் உணர்வு, இன்னும் எத்தனை நாள் ஆசைகளை அடக்கிக்கொண்டு வாழ்வது? அவனது வயதிற்கு நேர்மையாக கிடைத்திருக்கவேண்டிய இன்பங்கள் எதையும் அனுபவித்திராதவன், இவள் அருகே வரும்போது, கன்னியம் கட்டுபாடெல்லாம் கட்டவிழ்ந்துபோகிறது. வேரொரு பெண்ணை தவறாய் ஒரு பார்வை பார்த்து அறியாதவன், அவளின் அருகே மட்டும் இயல்பாய் இருக்கிறான், மென்மையான அவள் அனைப்பில் மட்டும் தன் ஆண்மையை உணருகிறான்.  தன் வாழ்வின் ரணங்கள் எதையும் அவள் அறிந்தாளில்லை, ஆனால் அவனது தேவைகளை இவள் உணர்ந்து கொள்கிறாள். அவளது காதலில், வயதில் ஏற்படுகிற தாபமோ, மோகமோ இல்லை, முற்றிலும் இவனை அமைதியுற செய்யும் காதல் மட்டுமே இருந்தது.

நிலவு தன் ஓளியை இருவர் மீது பாய்ச்சிக்கொண்டிருந்தது. திடிரென்று ஏற்பட்ட அந்த மின் துண்டிப்பால், இரவு இன்னும் அதிகமாய் தெரிந்தது, வானத்து நிலவின் ஒளியைத்தவிர செயற்கையாய் ஏதும் வெளிச்சமற்ற, அந்த இரவில் அவளை அனைந்து சரிந்து அமர்ந்தான், மழைபெய்து நனைந்திருந்த மாடித்தளம் சில்லிட்டிருந்தது. அவனோடு ஒன்றி அமர்ந்துகொண்டாள், இது என்னமாதிரியான உணர்வு, அதை அடக்க அவள் விரும்பவில்லை, அவனிடம் ஒன்றிபோவதிலும் குழைந்து இருப்பதிலும் அவளுக்கு ஆட்சேபனை இல்லைபோலும்.  தித்திப்பாய் அவன் தந்த முத்தங்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டாள், எப்பொதேனும் எல்லை மீற துணிந்த அவன் விரல்களை மட்டும் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள். அதுவும் அவனுக்கு பிடித்திருந்தது, அவளை அடையும் உரிமை இன்னும் வரவில்லை என்பதன்  பொருள் அதுவென புரிந்தது. எனினும் அவனை ஏமாற்றாது அவனது தீண்டலுக்கு தன்னை இளக்கித்தந்தவளை இருக்கி அனைத்துக்கொண்டான், வெகு நேரத்திற்கு பிறகு, துண்டிக்கப்பட்ட மின்விளக்குகள் ஒளிர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.