” சார் உங்கக்கிட்டயா இருக்கு இந்த சாவி, மேம்கிட்ட வண்டிய எடுக்க சாவிகேட்டா, அவங்க எங்கயோ மிஸ் பன்னிடேனு சொன்னாங்க.. அது மட்டுமில்லாம ரிஷி சார் மேம தனியா வண்டி ஓட்டக்கூடாதுனு சொல்லியிருக்காங்க.. அதான்..”
“உங்க மேம எங்க கோபி!”
“சார் நான் உள்ள போய், வேர வண்டியோட கீ எடுத்துட்டு வர்றதுக்குள்ள அவங்க கிளம்பிட்டாங்க..கேப்ல போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!”
எவ்வளவு காயப்பட்டிருந்தால்.. அவள் இங்கே நிற்கப்பொறுக்காது கிளம்பியிருப்பாளென அவனுக்கு தோன்றியது. பெரும் செல்வந்தனால் ஏமாற்றப்பட்டு வனிதாபட்ட கஷ்டங்களை நேரே கண்டு அனுபவித்தவன், அவனால் ஒரு செல்வந்தனின் பெண்ணை கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழமுடியுமா? மேலும் அது எளிதில் நடக்கப்போவதில்லை.. வீணாக கீர்த்தானவின் மனதையோ இல்லை வனிதாவையோ வருந்த செய்ய அவன் விரும்பவில்லை..
“சாரி டீ நீ தேவத உன்ன காயப்படுத்தாம நான் விலகனும்னு தான் நினைக்கிறேன்.. ஐயம் சாரி.. “ அவன் மனம் கரைந்தது.
தொடரும்
{kunena_discuss:1120}