(Reading time: 28 - 55 minutes)

எக்ஸ்கலேட்டரில் மேல வந்துகிட்டே சொல்லு என்றான், அழகுநிலா, அவன் கூறியதை பொருட்படுத்தாமல் லிப்டினுள் மேலே தேர்ட் புளோர் போக ஏறிக்கொண்டே பேச ஆரம்பித்தாள்.

அவள் பேசும்முன், நான் உன்னை லிப்டில் வரச்சொல்லலை அதில் உன் பக்கத்தில் ஆளை நிறுத்திக்கொண்டு எதுவும் நீ பேசவேண்டாம் மேல வந்ததும் பேசலாம் என்றான் .

அதற்கு அழகி, நான் செகண்ட் ப்ளோரில் லிப்டில் இருந்து வெளியில் வந்து தேர்டு ப்ளோருக்கு நீ சொன்ன எக்ஸ்கலேட்டேர்ரில் வருகிறேன், நான் சொல்வதற்கு நீ என்ன சொல்கிறாய்? என்று பார்த்தபிறகு தான் உன்னை சந்திப்பேன் என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் லிப்ட் செகண்ட் ப்ளோரில் நின்றது. அவளும் வெளிவந்துவிட்டு எக்ஸ்சலேட்டரின் பக்கம் சென்று கொண்டே அவனிடம் பேச்சு கொடுத்தாள்.

ம்...சொல்லு என்று கூரியவனிடம் , உன் மொபைலை உன்னிடம் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதற்குமுன் நீ அன்று என்னை சூட் பண்ணிய வீடியோ பதிவை நானே என் கையாலேயே டெலிட் பண்ணனும் என்றாள்.

அவள் அவனிடம் பேசிக்கொண்டே கண்களை சுற்றிலும் அழைய விட்டாள். பின் நான் தேர்ட் புளோர் வந்துட்டேன் நீ எங்கு நிற்கிறாய்? என்று கேட்டாள்.

அதற்கு அவன் அப்படியே ரைட் சைடில் வா என்று கட்டளையிட, ரைட் சாட்டில் கண்களை அழைய விட்டபடி வந்தவளுக்கு அங்கிருந்த டைமண்ட் ஷோ ரூமின் கண்ணாடி தடுப்புகளுக்கு பின் கவ்ன்டரில் பில் பே பண்ணிக்கொண்டு இருந்த அன்று தனக்கு ஹோட்டலில் உதவிய ஹன்ட்சம் ஹீரோவை பார்த்து இவன் அவனா..? என்று கண்கள் தெரித்துவிடுவதுபோல் அவனை பார்த்துக்கொண்டு நடக்கையில் அவளை நோக்கி வந்த நரேனும், இவள் யாரை அப்படி பார்க்கிறாள் என்று நோட்டம் விடுகையில் ஆதித்தை பார்த்துவிட்டான்.

உடனே டக்கென்று அங்கு சென்ற படிக்கட்டின் மறைவில் மறைந்து நின்றவன் அழகுநிலா அந்த படிக்கட்டை தாண்டும் போது அவளின் கை பிடித்து தனக்கருகில் இழுத்து அவளின் வாய் பொத்தியவன் நீ மட்டும்தான் தனியா வரணும் என்று சொன்னேன். ஆதித்தராஜை எதற்கு வரச்சொன்ன? என்று கர்ஜித்தவன் அவள் கையில் இருந்த ஹன்ட்பேக்கை பறித்தான்.

ஏய் என்பேக்கை குடு நானே உன் போனை எடுத்துத்தருவேன். ஆனால் நான் சொன்னதுபோல் என் வீடியோ ரெக்கார்டை டெலிட் செய்ய வேண்டும் என்று அவள் கூறுவதை அவன் பொருட்படுத்தாமல் மற்றவர்கள் பார்க்கும் முன் அவளிடம் இருந்து போனை எடுத்து ஓடிவிடவேண்டும் என்று அவளுக்கு எட்டாதவாறு பேக்கை தூக்கி பிடித்து, ஜிப்பை அவிழ்த்து அதினுள் கைவிட்டு போனை அவன் எடுக்கப் பார்க்கும் போது அவள் பிடித்து இழுக்க, பேக் தலைகீழாக கவிழ்ந்து அதில் இருந்த பணம் சில்லரையுடன் அந்த மொபைளும் கீழே விழுந்தது

நரேன் அதனை எடுக்கும் முன் அதனை வேகமாக குனிந்து எடுத்த அழகுநிலா வேகமாக ஓடபார்த்தாள் அப்பொழுது எட்டி ஓடும் அவளை, பிடிக்கப் பார்த்தவனின் கையோடு அவளின் சுடிதாரின் துப்பட்டா மட்டுமே மாட்டியது சிட்டாக பறந்த அழ்குநிலாவை துரத்திவந்தான்

எங்கே அவன் அந்த வீடியோ பதிவை டெலிட் செய்யாமல் தன்னிடமிருந்து பிடுங்கி போய்விடுவானோ! என்ற பயத்தில் வேகமாக ஓடி ஆதித் இருந்த கடைக்குள் போய் அதித்தின் கையை பிடித்து காப்பாத்துங்க... காப்பாத்துங்க... சார் என்று பதட்டத்துடன் கூறியவளையும், அவளின் பின்னால் கையில் அவளின் துப்பட்டாவுடன் கண்ணாடி கதவின் அருகில் வேகமாக வந்த நரேனையும் பார்த்தான்.

அந்த ஸ்டாலின் வாசலுக்கு ஓடிவந்த நரேன் ஆதித்திடம் அவள் சரன்புகுந்ததை கண்டவன் அவன் பார்வையில் இருந்து வேகமாக வேறுபுறம் ஓடி மறைந்தான்.

துப்பட்டாவை பிடித்து இழுக்கும் போது அவளின் சுடிதாரையும் எட்டி பிடித்து இழுத்ததினால் தோள் பகுதியில் தையல் கிழிந்து தொங்கிய அவளின் உடையை மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைக்க தன்னுடன் அவளை இழுத்து அனைத்த ஆதித், நீ அன்னைக்கு ஹோட்டலில் பார்த்தவ... தானே! என்று கேட்டான் . அதற்கு ஆமாம் என்று தலை ஆட்டிக்கொண்டே தன்னை காப்பாற்றச்சொல்லி ஆத்தின் கைப்பற்றி கேட்டாலும் அந்த பதட்டத்திலும் அவன் தன்னை இழுத்து அணைத்ததும் அன்னிச்சை செயல்போல அவனை தடுக்க முயன்ற அழ்குநிலாவிடம் உன் ட்ரெஸ் கிழிந்து இருக்கு என்று சொல்லி அவளை தன்னுடன் அனைப்பதுபோல் பிடித்து கிழிசலினால் தெரிந்த அவளின் உடலை மறைத்தபடி என்ன ஆச்சு என்று கேட்டான்.

அதற்கு அவன்..அவன்..மொபைல்..அன்னைக்கு என்று பதட்டத்தில் கைகால் நடுங்க பேசமுடியாமல் வார்த்தைகள் அவளின் வாயில் தந்தியடிப்பதை பார்த்த ஆதித் அவளின் பதட்டத்தை தணிக்கும் விதமாக முதுகில் தட்டிக்கொடுத்தான்.

அப்பொழுது அவனுக்கு ஆசையாக ரிங் வாங்கிவிட்டு சர்பிரைசாக அவனுக்கு கொடுக்க அங்கிருந்த சேல்ஸ்மேன் மூலமாக கவ்ன்டரில் நின்று கொண்டிருக்கும் ஆதித்துக்குத் தெரியாமல் அந்த ரிங்கிற்கான் பணத்தை செலுத்தி பேக் செய்து வாங்கியவள் கவ்ன்டரில் நின்று கொண்டிருந்த ஆதித்தை நோக்கி போனாள்....

ஆனால் ஆதித் ஓர் அழகிய இளம் பெண்ணை அணைத்தபடி நின்ற காட்சி மட்டுமே அவளின் கண்ணில் தெரிந்தது. அதனை பார்த்த வர்ஷா அதிர்ந்து நின்றது ஒரு நிமிடம் மட்டுமே...

அடுத்த செகண்ட் ஆதித்....! என்று கோபத்துடன் கத்தினாள். அவளின் கோபக்குரலில் தான் நிற்கும் நிலையை பார்த்து அவள் தன்னை தவறாக நினைப்பதை யூகித்த ஆதித் அழ்குநிலாவை விளக்க நினைத்து அவளை தள்ளி நிறுத்த முனைந்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.